08-04-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 08-04-2022.

April 13, 2022

08-04-2022 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 
 
தமிழில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
சிங்களத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
 
முன்னைய வர்த்தமானி அறிவித்தலுக்கு செல்ல....
 
 
 
08-04-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 08-04-2022. 08-04-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) /  Official Government Gazette Released on 08-04-2022. Reviewed by Irumbu Thirai News on April 13, 2022 Rating: 5

பேராதனைப் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸினால் நடத்தப்படும் கட்டுரை போட்டி

April 13, 2022

பேராதனைப் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸினால் அகில இலங்கை பல்கலைக்கழக இளம் பட்டதாரிகளுக்கிடையே கட்டுரை போட்டி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
 
எழுத்தாளரின் பெயர், பல்கலைக்கழகம், பீடம், ஆண்டு என்பவற்றை குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். 
 
வெற்றியாளர்களுக்கு பெறுமதியான பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். 
 
தெரிவு செய்யப்படும் ஆக்கங்கள் வருடாந்தம் 
 
வெளியிடப்படும் 'அல்இன்ஷிராஹ்' இதழில் பிரசுரமாகும். 
 
ஆக்கங்களை மின்னஞ்சல் மூலமோ அல்லது இணைய படிவத்தில் தரவேற்றுதன் மூலமோ அல்லது தபால் மூலமோ அனுப்பலாம். 
 
தலைப்புகள்(ஏதாவது ஒரு தலைப்பில் எழுத வேண்டும்): 
1) ஆன்மீகத்தை வலுவூட்டும் ரமழான். 
2) வாழ்க்கைக்கு வழிகாட்டும் பத்ர் போர். 
3) அல்லாஹ்விடத்தில் சிறந்தவர் தக்வாவில் சிறந்தவரே. 
4) அன்றைய மதீனாவின் ரமழானிய இரவொன்று. 

மொழி
தமிழ்மொழி மூலம் மாத்திரமே எழுதப்பட வேண்டும். 
 
சொற்கள்
1000 - 1250. 
 
மின்னஞ்சல் முகவரி: 
peramajlis@gmail.com 
 
இணைய படிவத்தில் பதிவேற்றுவதற்கான லிங்க்: 
 
முகவரி
Muslim Majlis. 
University of Peradeniya. 
Peradeniya. 
 
முடிவுத் திகதி: 
20-04-2022.
 
மேலதிக விபரங்களை கீழே காணலாம்.

பேராதனைப் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸினால் நடத்தப்படும் கட்டுரை போட்டி பேராதனைப் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸினால் நடத்தப்படும் கட்டுரை போட்டி Reviewed by Irumbu Thirai News on April 13, 2022 Rating: 5

இம்ரான் கான்: நம்பிக்கையில்லா பிரேரணையில் நடந்தது என்ன?

April 10, 2022

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை அந்நாட்டு எதிர்க்கட்சிகள் கொண்டு வந்தன. 
 
இந்த நம்பிக்கையில்லா பிரேரணையானது அரசியல் யாப்புக்கு முரணானது எனக் கூறி அந்நாட்டின் பிரதி சபாநாயகர் அதனை நிராகரித்தார். 
 
இதனைத் தொடர்ந்து பாராளுமன்றத்தை கலைத்து தேர்தலுக்கு செல்வதாக இம்ரான்கான் அறிவித்தார். இவரின் இந்த பரிந்துரையை ஏற்று அந்நாட்டு ஜனாதிபதியும் பாராளுமன்றத்தை கலைப்பதற்கு உத்தரவிட்டார். 

இந்நிலையில் இது தொடர்பான வழக்கை கடந்த வியாழக்கிழமை விசாரித்த உயர் நீதிமன்றம் நம்பிக்கை இல்லா பிரேரணையை ரத்து செய்த பிரதி சபாநாயகரின் முடிவு செல்லாது எனவும் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது செல்லாது எனவும் நம்பிக்கை இல்லா பிரேரணை மீண்டும் நடத்தப்பட வேண்டும் எனவும் உத்தரவிட்டது. 
 
இதனை தொடர்ந்து நேற்றைய தினம் நம்பிக்கையில்லா பிரேரணை நடைபெற்றது. இந்தப் பிரேரணை நிறைவேற்றுவதற்கு ஆகக்குறைந்தது 172 வாக்குகள் தேவை. 
 
இந்நிலையில் நேற்று நடைபெற்ற நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் இம்ரான் கானுக்கு எதிராக 

174 வாக்குகள் கிடைத்துள்ளன. அந்த வகையில் அவர் தற்போது பிரதமர் பதவியை இழந்துள்ளார். 
 
எனவே தற்போது வேறு ஒரு பிரதமர் தெரிவு செய்யப்பட வேண்டும். அவர் 2023 ஒக்ரோபர் மாதம் நடைபெறும் தேர்தல் வரை பதவியில் இருப்பார். 
 
பாகிஸ்தானில் எந்தவொரு பிரதமரும் ஆட்சி காலம் முடியும் வரை பதவியில் இருந்ததில்லை. மேலும் நம்பிக்கை இல்லா பிரேரணை மூலம் பதவி கவிழ்க்கப்பட்ட பாகிஸ்தானின் முதலாவது பிரதமர் இம்ரான் கான் ஆவார். 
 
இம்ரான் கான்: நம்பிக்கையில்லா பிரேரணையில் நடந்தது என்ன? இம்ரான் கான்: நம்பிக்கையில்லா பிரேரணையில் நடந்தது என்ன? Reviewed by Irumbu Thirai News on April 10, 2022 Rating: 5

சா. தர பரீட்சை - 2021(2022): விடைத்தாள் திருத்தும் பணிக்கான விண்ணப்பங்கள் கோரல்:

April 08, 2022

2021 ற்கான சாதாரண தர பரீட்சை இந்த வருடம் நடைபெறுகிறது. இதற்காக விடைத்தாள் திருத்தம் பணிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 
 
விண்ணப்பங்கள் யாவும் Online முறையிலேயே சமர்ப்பிக்கப்பட வேண்டும். 

விண்ணப்பிக்கும் பாடத்தில் பட்டமோ டிப்ளோமா பயிற்சியோ பெற்றிருத்தல் வேண்டும். மேலும் குறித்த வகுப்புகளில் கற்பிப்பவராகவோ அல்லது அந்த பாடத்திற்குரிய அதிகாரியாகவோ இருத்தல் வேண்டும். 
 
விண்ணப்பங்கள் யாவற்றையும் பாடசாலை அதிபர் Online முறையிலேயே சிபாரிசு செய்ய வேண்டும். 
 
விண்ணப்ப முடிவுத் திகதி: 20-04-2022.
 
Online விண்ணப்பம் தொடர்பான அறிவுறுத்தல்களை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
Online விண்ணப்பத்திற்கு செல்ல கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
 
சா. தர பரீட்சை - 2021(2022): விடைத்தாள் திருத்தும் பணிக்கான விண்ணப்பங்கள் கோரல்: சா. தர பரீட்சை - 2021(2022): விடைத்தாள் திருத்தும் பணிக்கான விண்ணப்பங்கள் கோரல்: Reviewed by Irumbu Thirai News on April 08, 2022 Rating: 5

தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு இந்திய அரசால் வழங்கப்படும் புலமைப்பரிசிலுக்கான விண்ணப்பம்

April 08, 2022

தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் புலமைப்பரிசில்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 
 
புலமைப்பரிசில் வழங்கப்படும் விடயங்கள்: 
1) க.பொ.த. (உ/தரம்) 
2) பட்டக் கற்கை நெறிகள் 
3) தொழில்சார் மற்றும் தொழில்நுட்ப கற்கைநெறிகள். 

தகைமைகள்
1) சா. தர அல்லது உ.தரத்தில் சித்தி. 
2) 25 வயதிற்கு குறைவாக இருத்தல். 
 
விண்ணப்ப படிவங்களை பெறும் இடங்கள்: 
இந்திய தூதரகம் மற்றும் துணை தூதரகம் 
 
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: 
Honorary Secretary. 
CEWET. 
c/o: High Commission of India. 
P.O. Box: 882, 
Colombo - 03. 
 
துணை தூதரக முகவரி: 
Assistant High Commission of India. 
01A, Mahamaya Mawatha, 
P.O. Box: 47. 
Kandy. 
 
விண்ணப்ப முடிவுத் திகதி: 
29-04-2022. 
 
மேலதிக விபரங்களை கீழே காணலாம்.
தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு இந்திய அரசால் வழங்கப்படும் புலமைப்பரிசிலுக்கான விண்ணப்பம் தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு இந்திய அரசால் வழங்கப்படும் புலமைப்பரிசிலுக்கான விண்ணப்பம் Reviewed by Irumbu Thirai News on April 08, 2022 Rating: 5

தகவல் தொடர்பாடல் மற்றும் தொழில்நுட்பவியல் கற்கைநெறி (NAITA - Jaffna)

April 08, 2022

தேசிய பயிலுநர் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையின் யாழ் மாவட்ட அலுவலகத்தினால் தகவல் தொடர்பாடல் மற்றும் தொழில்நுட்ப பயிற்சி நெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

வயது: 16 - 25.

கட்டணம்: இலவசம்

 விண்ணப்ப முடிவு திகதி: 25-04-2022

இது தொடர்பான பத்திரிகை அறிவித்தலைக் கீழே காணலாம்.

 


 
தகவல் தொடர்பாடல் மற்றும் தொழில்நுட்பவியல் கற்கைநெறி (NAITA - Jaffna) தகவல் தொடர்பாடல் மற்றும் தொழில்நுட்பவியல் கற்கைநெறி  (NAITA - Jaffna) Reviewed by Irumbu Thirai News on April 08, 2022 Rating: 5

சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை!

April 06, 2022

சகல அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் என்பவற்றுக்கு இன்று முதல் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 

எதிர்வரும் 8ம் திகதி வெள்ளிக்கிழமை முதல் விடுமுறை வழங்கப்படுவதாகவே ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதற்கு முன்னதாகவே இன்றுடன் கல்வி நடவடிக்கைகளை நிறைவுறுத்தப்பட்டு விடுமுறை வழங்கப்படுகிறது. 
 
எவ்வாறாயினும் 2022 ஆம் ஆண்டுக்குரிய முதலாம் தவணை ஏற்கனவே அறிவித்ததன்படி எதிர்வரும் 18 ஆம் திகதி ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதேவேளை நாட்டில் உள்ள சகல பாடசாலைகளினதும் ஆரம்ப பிரிவுக்கு கடந்த திங்கட்கிழமை முதலே தவணை விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை! சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை! Reviewed by Irumbu Thirai News on April 06, 2022 Rating: 5

28.03.2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்

April 06, 2022

28.03.2022 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்களை இங்கு தருகிறோம். இதில், பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
 
முன்னைய அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்களைப் பார்வையிட...
 
28.03.2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் 28.03.2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் Reviewed by Irumbu Thirai News on April 06, 2022 Rating: 5

01-04-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 01-04-2022

April 05, 2022

01-04-2022 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 
 
தமிழில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
சிங்களத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
 
முன்னைய வர்த்தமானி அறிவித்தலுக்கு செல்ல...
  
01-04-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 01-04-2022 01-04-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 01-04-2022 Reviewed by Irumbu Thirai News on April 05, 2022 Rating: 5

4ம் திகதி முதல் மாணவர்களை பாடசாலைக்கு அழைப்பது தொடர்பில் கல்வி அமைச்சின் விசேட அறிவித்தல்

April 02, 2022


மாணவர்களை பாடசாலைக்கு அழைப்பது தொடர்பில் கல்வி அமைச்சானது அதிபர்களுக்கு விஷேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. 


அதாவது இம்மாதம் 4ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரை பாடசாலைக்கு மாணவர்களை பரீட்சை மற்றும் அத்தியாவசிய விடயங்களுக்காக மாத்திரம் அழைப்பதற்கு அதிபர்களுக்கு அதிகாரம் வழங்கும் வகையில் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஏனைய மாணவர்களை பாடசாலைக்கு அழைக்காமல் இருக்கலாம். 

 

இதேவேளை நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி மற்றும் மின்சார பிரச்சினை என்பவற்றைக் கருத்திற்கொண்டு முதலாம் தவணை விடுமுறையை இம் மாதம் 4ஆம் திகதி வழங்குமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கல்வி அமைச்சுக்கு ஏற்கனவே சிபாரிசு செய்தமை குறிப்பிடத்தக்கது.

4ம் திகதி முதல் மாணவர்களை பாடசாலைக்கு அழைப்பது தொடர்பில் கல்வி அமைச்சின் விசேட அறிவித்தல் 4ம் திகதி முதல் மாணவர்களை பாடசாலைக்கு அழைப்பது தொடர்பில் கல்வி அமைச்சின் விசேட அறிவித்தல் Reviewed by Irumbu Thirai News on April 02, 2022 Rating: 5

25-03-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 25-03-2022

March 25, 2022

25-03-2022 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 
 
தமிழில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
சிங்களத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
முன்னைய வர்த்தமானி அறிவித்தலுக்கு செல்ல...
25-03-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 25-03-2022 25-03-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 25-03-2022 Reviewed by Irumbu Thirai News on March 25, 2022 Rating: 5

21.03.2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்

March 23, 2022

21.03.2022 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்களை இங்கு தருகிறோம். இதில், பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
முன்னைய அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்களைப் பார்வையிட...
 
21.03.2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் 21.03.2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் Reviewed by Irumbu Thirai News on March 23, 2022 Rating: 5

தவணை பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு

March 20, 2022

காகிதம் மற்றும் ஏனைய மூலப் பொருட்களுக்கு நாட்டில் நிலவும் தட்டுப்பாடு காரணமாக பாடசாலைகளில் தவணை பரீட்சைகளை நடத்த முடியாத சூழ்நிலை காணப்படுவதாக வெளியான தகவல்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாக கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். 
 
வடமத்திய, வடமேல், சப்ரகமுவ, ஊவா, கிழக்கு மாகாணங்களில் அவ்வாறான பற்றாக்குறையான நிலை இல்லை என மாகாண கல்விப் பணிப்பாளர்கள் தமக்கு அறிவித்ததாக கல்வியமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார். 
 
இதேவேளை காகிதங்களை கொள்வனவு செய்வதில் ஏதாவது பிரச்சினைகள் ஏற்படும் சந்தர்ப்பத்தில் இந்திய கடன் வசதியின் கீழ் குறித்த பிரச்சினையை தீர்ப்பதற்கு ஜனாதிபதி செயலாளர் காமினி செனரத் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 
 
எனவே இம்முறை பாடசாலைகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள தவணைப் பரீட்சைகளில் பிற்போட அவசியமில்லை என கல்வியமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
தவணை பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு தவணை பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு Reviewed by Irumbu Thirai News on March 20, 2022 Rating: 5
Powered by Blogger.