சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை!


சகல அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் என்பவற்றுக்கு இன்று முதல் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 

எதிர்வரும் 8ம் திகதி வெள்ளிக்கிழமை முதல் விடுமுறை வழங்கப்படுவதாகவே ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதற்கு முன்னதாகவே இன்றுடன் கல்வி நடவடிக்கைகளை நிறைவுறுத்தப்பட்டு விடுமுறை வழங்கப்படுகிறது. 
 
எவ்வாறாயினும் 2022 ஆம் ஆண்டுக்குரிய முதலாம் தவணை ஏற்கனவே அறிவித்ததன்படி எதிர்வரும் 18 ஆம் திகதி ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதேவேளை நாட்டில் உள்ள சகல பாடசாலைகளினதும் ஆரம்ப பிரிவுக்கு கடந்த திங்கட்கிழமை முதலே தவணை விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை! சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை! Reviewed by Irumbu Thirai News on April 06, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.