வரலாற்று சாதனை படைத்த ஜனாதிபதி தேர்தல்


இந்த வருடம் (2019) இடம்பெறும் ஜனாதிபதி தேர்தல் வரலாற்று சாதனை படைத்த ஜனாதிபதி தேர்தலாக மாறுகிறது. இம்முறை என்றும் இல்லாதவாறு 41 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். 19 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் 2 வேறு அரசியல் கட்சிகளும் 19 சுட்யேட்சை வேட்பாளர்களுமாக 41 பேர் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் 

வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் அனந்தி சசிதரனுடனும், இணைந்தே சுயேட்சையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளனர்..கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். 
இதேவேளை எட்டாவது ஜனாதிபதித் தேர்தலுக்காக வேட்புமனுக்களைப் பொறுப்பேற்கும் பணி நாளை 9.00 மணி தொடக்கம் 11.00 மணிவரை இடம்பெறவுள்ளது. 11.30ற்கு எதிர்ப்புக்களைத் தெரிவிக்க முடியும். 
கட்டுப்பணம் செலுத்திய 41 பேரின் விபரங்களைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

வரலாற்று சாதனை படைத்த ஜனாதிபதி தேர்தல் வரலாற்று சாதனை படைத்த ஜனாதிபதி தேர்தல் Reviewed by irumbuthirai on October 06, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.