அரச ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்ட சலுகைகள்



அமைச்சர் மங்கள சமரவீர நேற்று பாராளுமன்றத்தில் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரையான அரசாங்கத்தின் செலவினத்தை சமாளிப்பதற்காக ஆயிரத்து 474 பில்லியன் ரூபா பெறுமதியான இடைக்கால கணக்கீட்டு அறிக்கையை  சமர்ப்பித்தார். இதில் அரச ஊழியர்களுக்கான சலுகைகள் முன்மொழியப்பட்டுள்ளன. இதன்படி, 

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு செலுத்தப்படும் 14 நாள் விசேட கொடுப்பனவு டிசெம்பர் மாதம் 14 ஆம் திகதி முதல் புதிய கொடுப்பனவாக வழங்கப்படுகிறது. 
அரச ஊழியர்களின் அனர்த்த கடனை உயர்ந்தபட்ச தொகையாக 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாவிலிருந்து மூன்று லட்சத்து 50 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான வட்டி வீதம் மூன்று சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற இன்னும் பல சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் முழு விபரத்தை அறிய கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

அரச ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்ட சலுகைகள் அரச ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்ட சலுகைகள் Reviewed by irumbuthirai on October 24, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.