சட்ட விதிகளை மீறி பாடசாலைகளுக்கு மாணவர் அனுமதி – விசாரணைக்கு உத்தரவு



ஓக்டோபர் மாதம் 7 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் தேர்தல் சட்ட விதிகள் மற்றும் அரசியல் யாப்பை மீறிய வகையில் பாடசாலைகளுக்கு மாணவர்களை உள்வாங்குவதற்காக 

சட்டவிரோதமான வகையில் 427 கடிதங்கள் வழங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஓக்டோபர் மாதம் 7 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் வழங்கப்பட்ட இந்த கடிதங்களில் அமைச்சின் செயலாளர்களின் போலி கையெழுத்து பயன்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் விசாரணை நடாத்தி 3 வார காலத்திற்குள் அறிக்கையொன்றை வழங்குமாறு கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தனது அமைச்சின் விசேட விசாரணை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 
(அ.த.தி)
சட்ட விதிகளை மீறி பாடசாலைகளுக்கு மாணவர் அனுமதி – விசாரணைக்கு உத்தரவு சட்ட விதிகளை மீறி பாடசாலைகளுக்கு மாணவர் அனுமதி – விசாரணைக்கு உத்தரவு Reviewed by irumbuthirai on December 05, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.