மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்துக்கு அருகாமையில் நடமாடும் தரகர்களை கைது செய்ய நடவடிக்கை


கொழும்பு நாரஹன்பிட்டி உள்ளிட்ட நாட்டின் அனைத்து மோட்டார் போக்குவரத்து திணைக்கள அலுவலகங்களுக்கு அருகாமையில் நடமாடும் தரகர்களை கைது செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் மகிந்த அமரவீர அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். நேற்று (09) 
காலை நாரஹன்பிட்டியில் உள்ள மோட்டரர் போக்குவரத்து திணைக்களத்துக்கு அமைச்சர் திடீரென விஜயம் செய்தார் . இதன்போதே அமைச்சர் இந்த ஆலோசனையை அதிகாரிகளுக்கு வழங்கினார். நாரஹன்பிட்ட பிரதான அலுவலகம் மற்றும் மாவட்ட கிளை அலுவலகங்களுக்கு அருகாமையில் உள்ள இந்த தரகர்களினால் பொதுமக்கள் பெரும் சிரமங்கள் மற்றும்; துன்புறுத்தலுக்கு உள்ளாவதாக முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாகவும் அவற்றின் உண்மைத் தன்மையை கண்டறிவதற்காக தாம் திடீரென திணைக்களத்துக்கு விஜயம் செய்ததாக அமைச்சர் இதன்போது மேலும் தெரிவித்தார்.
(அ.த.தி)
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்துக்கு அருகாமையில் நடமாடும் தரகர்களை கைது செய்ய நடவடிக்கை மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்துக்கு அருகாமையில் நடமாடும் தரகர்களை கைது செய்ய நடவடிக்கை Reviewed by irumbuthirai on December 10, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.