பாடசாலைகளை மீள ஆரம்பித்தல்: ஆரம்பப் பிரிவுக்கு அறிமுகமான 20 வாரம் கொண்ட புதிய பாடத்திட்டம்! (முழு விபரம் இணைப்பு)


Recovery Plan for Learning loss Due to COVIC 19 Pandemic (Grade 1 to 5) 
 
கொவிட் தொற்று நிலைமை காரணமாக பாடசாலை மாணவர்கள் இழந்திருக்கின்ற பாடசாலை காலத்திற்கமைய கலைத் திட்டத்தை நிறைவு செய்வதற்கு பதிலீடான உத்தேச நிகழ்ச்சித்திட்டம் தொடர்பான ஆலோசனைகள். 
 
கொரோனா தொற்று நிலைமை காரணமாக 2020 மற்றும் 2021 ஆம் வருடங்களில் தரம் 1 தொடக்கம் தரம் 5 வரை ஆரம்பக்கல்வி பருவத்தில் கல்வி பயிலும் பிள்ளைகளுக்கான கவனத்திற்கொள்ள வேண்டிய அளவில் கற்றலுக்கான காலம் இழக்கப்பட்டிருக்கின்றமை அவதானிக்கப்பட்டது. அவ்வாறு கற்றல் இழப்பு ஏற்பட்ட காலத்துடன் கல்வி ஆண்டின் இறுதியில் அடுத்த வகுப்பிற்கு கற்றலுக்காக பிரவேசிப்பதற்கான அத்தியாவசியமான கற்றல் உள்ளடக்கத்தை இனங் காணவும் வேண்டியுள்ளது. 
 
இதற்காக முதலாவது இரண்டாவது மற்றும் மூன்றாவது முதன்மை நிலைகளுக்காக ஏற்கனவே இனங்காணப்பட்டுள்ள அத்தியாவசிய கற்றல் எண்ணக்கருவை அடிப்படையாக கொண்டு ஒவ்வொரு வகுப்புகளிலும் இருக்கின்ற மாணவர்களுக்கு அடுத்த வகுப்பிற்கு செல்வதற்கான அத்தியாவசிய கற்றல் உள்ளடக்கத்தை உள்ளடக்கியதான திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. 
 
"பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் தொடர்பாகவும் பரீட்சை, பாடவிதானத்தை நிறைவு செய்தல், டிசம்பர் விடுமுறை போன்ற பல விடயங்கள் தொடர்பாகவும் கல்வியமைச்சின் செயலாளர் தனியார் தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியின் தமிழ் வடிவத்தைப் பார்வையிட..."
 
அந்தவகையில் 20 வாரம் கொண்ட கற்றல் கற்பித்தலுக்கான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. 2020 மற்றும் 2021 ல் இழந்த கற்றல் காலம் 2021 ல் எஞ்சியுள்ள கற்றல் காலம் என்பவற்றைக் கருத்திற்கொண்டு இது தயாரிக்கப்பட்டுள்ளது. பாடசாலையின் தேவைக்கேற்ப இந்த உள்ளடக்கங்களை பயன்படுத்தலாம். 
 
கீழே உள்ள லிங்குகளைக் கிளிக் செய்து உரிய பாட உள்ளடக்கங்களை பெற்றுக் கொள்ளலாம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
பாடசாலைகளை மீள ஆரம்பித்தல்: ஆரம்பப் பிரிவுக்கு அறிமுகமான 20 வாரம் கொண்ட புதிய பாடத்திட்டம்! (முழு விபரம் இணைப்பு) பாடசாலைகளை மீள ஆரம்பித்தல்: ஆரம்பப் பிரிவுக்கு அறிமுகமான 20 வாரம் கொண்ட புதிய பாடத்திட்டம்! (முழு விபரம் இணைப்பு) Reviewed by Irumbu Thirai News on October 24, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.