சகல பாடசாலைகளிலும் ஏனைய வகுப்புக்களை மீள ஆரம்பித்தல்: கல்வி அமைச்சரின் அறிவிப்பு!


04 கட்டங்களாக பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் நடைமுறையின் கீழ் தற்போது முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் நாட்டிலுள்ள சகல பாடசாலைகளிலும் ஆரம்பப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் பாடசாலைகளில் ஏனைய வகுப்புகளையும் ஆரம்பிப்பது தொடர்பாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவிக்கையில், 

ஏனைய வகுப்புக்களை அடுத்த வாரத்தின் பின்னர் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 
 
நேற்று (29) கண்டி அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடாதிபதிகளை சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். 
 
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், 

தற்போது மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணிகள் இடம்பெற்று வருவதோடு பாடசாலைகளை சுத்திகரிக்கும் பணிகளும் இடம்பெறுகின்றன. மேலும் கொரோனா பரவலும் ஒப்பீட்டளவில் கட்டுப்பாட்டுக்கு வந்துள்ளது. எனவே சகல பாடசாலைகளிலும் ஏனைய வகுப்புக்களை அடுத்த வாரத்தின் பின்னர் மீள ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு மீள ஆரம்பிக்கும் திகதி தொடர்பில் அடுத்து வரும் நாட்களில் அறிவிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
சகல பாடசாலைகளிலும் ஏனைய வகுப்புக்களை மீள ஆரம்பித்தல்: கல்வி அமைச்சரின் அறிவிப்பு! சகல பாடசாலைகளிலும் ஏனைய வகுப்புக்களை மீள ஆரம்பித்தல்: கல்வி அமைச்சரின் அறிவிப்பு! Reviewed by Irumbu Thirai News on October 30, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.