உயர்தரப் பரீட்சையின் சில பாடங்களால் தமிழ் மொழிமூல மாணவர்கள் பாதிப்பு - பா.உ. சிறிதரன்


இம்முறை நடைபெறும் உயர்தரப் பரீட்சையின் சில பாடங்களுக்கான வினாத்தாளில் ஏற்பட்ட பிழைகள் காரணமாக தமிழ் மொழிமூல மாணவர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் நேற்று (22) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். 
 
குறிப்பாக கடந்த 7ஆம் திகதி நடைபெற்ற உயிரியல் பாட பகுதி - 1 வினாத்தாளிலும் பிழைகள் காணப்பட்டுள்ளன. எனவே இவ்வாறான நிலைமைகளினால் மாணவர்கள் பல்கலைக்கழக வாய்ப்பை இழக்கும் சந்தர்ப்பம் ஏற்படும். 
 
எனவே இந்த விடயம் தொடர்பாக கல்வியமைச்சர் உடனடியாக தலையிட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
உயர்தரப் பரீட்சையின் சில பாடங்களால் தமிழ் மொழிமூல மாணவர்கள் பாதிப்பு - பா.உ. சிறிதரன் உயர்தரப் பரீட்சையின் சில பாடங்களால் தமிழ் மொழிமூல மாணவர்கள் பாதிப்பு - பா.உ. சிறிதரன் Reviewed by Irumbu Thirai News on February 23, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.