A/L பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்!


இம்முறை உயர்தர பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 
 
அதாவது தமது துறைக்குரிய அனைத்து பாடங்களுக்கான பரீட்சைகளும் நிறைவடைந்திருந்தால் குறித்த மாணவர்கள் உடனடியாக கொவிட் தடுப்பூசியின் இரண்டாவது டோசைப் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 
 
இது தொடர்பில் தொற்றுநோயியல் பிரிவின் பிரதானி விசேட வைத்திய நிபுணர் சமித்த கினிகே தெரிவிக்கையில், 
 
தடுப்பூசி வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி சிறந்த முறையில் வழங்கப்பட்டு வருகின்றது. 12 - 16 வயதுக்குட்பட்ட 745,000 மாணவர்களுக்கும் 16 - 19 வயதுக்குட்பட்ட 11 இலட்சம் மாணவர்களுக்கும் தடுப்பூசி எவ்வித பாதிப்பும் இல்லாமல் வழங்கப்பட்டுள்ளது. 
 
இம்முறை நடைபெறும் உயர்தரப் பரீட்சையில் பல பிரிவுகளுக்கான பரீட்சைகள் நிறைவடைந்துள்ளன. எனவே அவ்வாறு பரீட்சைகள் நிறைவடைந்த மாணவர்கள் எந்தவொரு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திலும் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்தார்.
A/L பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்! A/L பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்! Reviewed by Irumbu Thirai News on February 23, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.