அதிபர்கள் ஆசிரியர்கள் வேலைநிறுத்தம்! கல்வி அமைச்சுக்கு எழுத்து மூலம் அறிவிப்பு!


எதிர்வரும் 25 ஆம் திகதி திங்கட்கிழமை அதிபர்கள் ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த வேலைநிறுத்தம் தொடர்பாக கல்வி அமைச்சுக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக அதிபர், ஆசிரியர், ஆசிரிய ஆலோசகர் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 
 
நாட்டில் நிலவும் எரிபொருள் பற்றாக்குறை எரிபொருள் நெருக்கடி போன்ற காரணங்களினால் போக்குவரத்தில் ஏற்படும் பிரச்சினைகளை சுட்டிக்காட்டி ஆசிரியர்களை அருகிலுள்ள பாடசாலைகளுக்கு தற்காலிகமாக இணைப்பு செய்யுமாறு அல்லது வேறு பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு குறித்த கூட்டமைப்பு ஏற்கனவே கல்வி அமைச்சுக்கு அறிவித்திருந்தது. ஆனால் அதனை கல்வியமைச்சு நிராகரித்தது. 
 
எனவே இந்த கோரிக்கையை மீள வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
 
நாட்டில் நிலவும் நெருக்கடியான நிலைமைகளினால் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் பாடசாலைக்கு வந்து செல்வதில் நடைமுறை சிக்கல்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
எனவே இந்த பணி பகிஷ்கரிப்பில் அதிபர்கள், ஆசிரியர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் இணையவுள்ளனர்.
 
அதிபர்கள் ஆசிரியர்கள் வேலைநிறுத்தம்! கல்வி அமைச்சுக்கு எழுத்து மூலம் அறிவிப்பு! அதிபர்கள் ஆசிரியர்கள் வேலைநிறுத்தம்! கல்வி அமைச்சுக்கு எழுத்து மூலம் அறிவிப்பு! Reviewed by Irumbu Thirai News on April 22, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.