ராணியின் மறைவை தொடர்ந்து இங்கிலாந்தின் தேசிய கீதம், நாணயம், கடவுச்சீட்டு என்பவற்றில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றங்கள்!



இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவை தொடர்ந்து புதிய மன்னராக மூன்றாம் சார்ல்ஸ் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இங்கிலாந்தின் தேசிய கீதம், கடவுச்சீட்டு, நாணயம் உட்பட பல விடயங்களில் பல முக்கிய அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. 

அதாவது 1952 இல் இங்கிலாந்து ராணியாக இரண்டாம் எலிசபெத் பதவியேற்றது முதல் பிரிட்டனின் தேசிய கீதத்தில் "காட் சேவ் தி குயின் (God save the Queen)" என்ற வரிகள் பாடப்பட்டு வந்தன. 
தற்போது மன்னராக சார்ல்ஸ் நியமிக்கப்பட்டுள்ளதால் அந்த வரிகள் "காட் சேவ் தி கிங் (God save the king) என்று மாற்றம் பெறுகிறது.

அதேபோன்று மன்னர் சார்ல்சை முன்னிறுத்தி அந்நாட்டு நாணயம், கடவுச்சீட்டு, அஞ்சல் தலை உள்ளிட்ட பலவற்றிலும் மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ராணியின் மறைவை தொடர்ந்து இங்கிலாந்தின் தேசிய கீதம், நாணயம், கடவுச்சீட்டு என்பவற்றில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றங்கள்! ராணியின் மறைவை தொடர்ந்து இங்கிலாந்தின் தேசிய கீதம், நாணயம், கடவுச்சீட்டு என்பவற்றில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றங்கள்! Reviewed by Irumbu Thirai News on September 10, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.