2023 உயர்தர பரீட்சைக்கு முதற் தடவையாக விண்ணப்பிப்பவர்கள் மற்றும் 2ஆம் 3ஆம் தடவையாக விண்ணப்பிப்பவர்களுக்கான அறிவித்தல்!



2023 உயர்தர பரீட்சைக்காக விண்ணப்பிப்பவர்களுக்கு முக்கியமான அறிவித்தலை பரீட்சை திணைக்களம் விடுத்துள்ளது. 

2023 ஆம் வருடத்திற்கான உயர்தர பரீட்சை 27-11-2023 தொடக்கம் 21-12-2023 வரை நடைபெறும். இதற்கான விண்ணப்பங்கள் Online முறை மூலம் 07-07-2023 தொடக்கம் 28-07-2023 வரை ஏற்றுக்கொள்ளப்படும். 

முதன்முறையாக விண்ணப்பிப்பவர்கள் இந்த காலப்பகுதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அவர்களுக்கு மேலதிக கால அவகாசம் வழங்கப்பட மாட்டாது. 

ஆனால் இரண்டாவது அல்லது மூன்றாவது முறையாக விண்ணப்பிப்பவர்கள் 2022 ற்குரிய உயர்தர பரீட்சைக்கு தோற்றியிருக்கும் பட்சத்தில் அதன் பெறுபேறுகள் வந்தவுடன் அவர்களுக்கு விண்ணப்பிக்க  அவகாசம் வழங்கப்படும். அந்த கால அவகாசத்தின் போது முதன்முறையாக விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பிக்க முடியாது.



Previous:


2023 உயர்தர பரீட்சைக்கு முதற் தடவையாக விண்ணப்பிப்பவர்கள் மற்றும் 2ஆம் 3ஆம் தடவையாக விண்ணப்பிப்பவர்களுக்கான அறிவித்தல்! 2023 உயர்தர பரீட்சைக்கு முதற் தடவையாக விண்ணப்பிப்பவர்கள் மற்றும் 2ஆம் 3ஆம் தடவையாக விண்ணப்பிப்பவர்களுக்கான அறிவித்தல்! Reviewed by Irumbu Thirai News on July 19, 2023 Rating: 5

No comments:

Powered by Blogger.