உ.தர பரீட்சை - 2023: மாணவர் வரவு தொடர்பில் புதிய அறிவிப்பு!



இந்த வருடம் க.பொ.த. (உ/த) பரீட்சைக்கு விண்ணப்பித்த மாணவர்களின் பாடசாலை வருகையை 40 வீதத்தை மாத்திரமே கருத்தில் கொள்ளுமாறு பாடசாலை அதிபர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். 

இந்த நடைமுறை 2023ஆம் ஆண்டுக்கு மட்டுமே பொருந்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு 80% வருகையைப் பரிசீலிப்பதாக முன்னர் அறிவிக்கப்பட்டதாகவும் பல்வேறு முறைப்பாடுகளைக் கருத்திற் கொண்டு இந்த வருடம் 40% வருகையை மாத்திரமே பரிசீலிக்க தீர்மானிக்கப்பட்டதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.



Previous:

உ.தர பரீட்சை - 2023: மாணவர் வரவு தொடர்பில் புதிய அறிவிப்பு! உ.தர பரீட்சை - 2023: மாணவர் வரவு தொடர்பில் புதிய அறிவிப்பு! Reviewed by Irumbu Thirai News on July 20, 2023 Rating: 5

No comments:

Powered by Blogger.