25-09-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்)

September 26, 2020

25-09-2020 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 
Official gazette released on 25-09-2020 (In three languages) 
இதில், 
அரச பதவி வெற்றிடங்கள், 
போட்டிப் பரீட்சைகள் உட்பட இன்னும் பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. 
கீழே உள்ள உரிய லிங்கை கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாகப் பார்வையிடுக. 
தமிழில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for Tami Gazette. 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for English Gazette. 
சிங்களத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for Sinhala Gazette.
25-09-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) 25-09-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) Reviewed by irumbuthirai on September 26, 2020 Rating: 5

அரசாங்கம் ஒருபோதும் தலையிடாது - நீதியமைச்சர்.

September 26, 2020

நீதியமைச்சோ அல்லது அரசாங்கமோ நீதிமன்றத்தில் இடம்பெறும் வழக்குகள் தொடர்பில் ஒருபோதும் தலையிடாதென நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார். 
பாராளுமன்றத்தின் நேற்றைய அமர்வின் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் ஒருபோதும் தலையிடாது - நீதியமைச்சர்.  அரசாங்கம் ஒருபோதும் தலையிடாது - நீதியமைச்சர். Reviewed by irumbuthirai on September 26, 2020 Rating: 5

"அதிக செல்வாக்கு மிக்க நபர்கள்" பட்டியலில் இடம்பெற்ற 82 வயது மூதாட்டி

September 26, 2020

"2020ஆம் ஆண்டின் அதிக செல்வாக்கு மிக்க நபர்கள்" பட்டியலில் பில்கிஸ் என்ற 82 வயது இந்திய மூதாட்டி ஒருவர் இடம் பெற்றுள்ளார். 
கடந்த ஆண்டு இந்தியாவில் நிறைவேற்றப்பட்ட 
சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக டெல்லியில் உள்ள முஸ்லிம் பகுதியான ஷாஹின் பாகில் நீண்ட கால அமைதிப் போராட்டம் நடைபெற்றது. 
இதில் பில்கிஸ் உட்பட  நூற்றுக்கணக்கான முஸ்லிம் பெண்களும் கலந்து கொண்டு அமைதியான முறையில் போராடினர். அவர்களுக்கு இதில் பல்வேறு மதங்களை சேர்ந்தவர்களும் ஆதரவாக இருந்தார்கள். 
இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் இந்திய அரசியல் அமைப்பின் முன்னுரையை படித்து, தாங்கள் இந்தியப் பிரஜைகள்தான் என்பதை அழுத்தமாக தெளிவுபடுத்தி உரையாற்றி, தேசபக்தி பாடல்களும் பாடினர். 
ஜனநாயகத்திற்கு எதிரான விஷயத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட மாணவர் தலைவர்கள் மற்றும் செயல்பாட்டாளர்களுக்கு பில்கிஸ் நடத்திய போராட்டம், நம்பிக்கையையும் வலிமையையும் அளித்து, நாடு முழுக்க அமைதியான போராட்டங்கள் நடத்தப்பட உந்துதலாக இருந்தது" என பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளரான ராணா ஆயுப் எழுதியுள்ளார். 
இந்த பட்டியலில் இந்திய பிரதமர் நரேந்திர மோதியும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
"அதிக செல்வாக்கு மிக்க நபர்கள்" பட்டியலில் இடம்பெற்ற 82 வயது மூதாட்டி "அதிக செல்வாக்கு மிக்க நபர்கள்" பட்டியலில் இடம்பெற்ற 82 வயது மூதாட்டி Reviewed by irumbuthirai on September 26, 2020 Rating: 5

SPB: சாவுடன் போராடிய அந்த நிமிடங்கள்: பொதுமக்கள் அஞ்சலி செலுத்தலாமா?

September 25, 2020

தான் பாடிய பாடல்களை அழியாத நினைவுகளாக தந்துவிட்டு பிரிந்து சென்றார் எஸ். பி. பாலசுப்ரமணியம் 
கொரோனா தொற்று காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாலசுப்பிரமணியம் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். இறக்கும்போது வயது 74. 
 ஆந்திர மாநிலம், நெல்லூரில் பிறந்த எஸ்.பி. பாலசுப்ரமணியம், 16 இந்திய மொழிகளில் 40,000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியவர். கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி கோவிட்-19 நிமோனியா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு, கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி முதல் உயிர் காக்கும் கருவிகளுடன் உதவியுடன் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மிகவும் தீவிர சிகிச்சை பிரிவில் பல்துறை மருத்துவ நிபுணர்கள் குழு அவரது உடல்நிலையை தொடர்ந்து கவனித்து வந்தது. 
அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று கடந்த 4ஆம் தேதி முடிவு வந்தது. 
இந்த நிலையில், 
இன்று (25.09.2020) காலையில் அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. அதிகபட்ச உயிர் காக்கும் சிகிச்சை கருவிகள் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த அவர், இதய சுவாச நிபுணர்கள் கடுமையாக முயற்சி மேற்கொள்ளப்பட்டபோதும், மேலும் மோசம் அடைந்தது. இந்த நிலையில், பிற்பகல் 1.04 மணிக்கு அவரது உயிர் பிரிந்துள்ளது என்று மருத்துவமனை தெரிவித்துள்ளது. 
இரு வாரங்களுக்கு முன்பு எஸ்.பி.பி உடல்நிலை தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவரது மகன் எஸ்.பி. சரண், 
எனது தந்தையின் உடல்நிலை மெல்ல, மெல்ல மீண்டு வருகிறது. அவர் எங்களை எல்லாம் அடையாளம் கண்டுள்ளார். விசில் அடிக்கிறார், பாடலை ஹம்மிங் செய்கிறார், அவரது பிறந்த நாளை கூட கொண்டாடினோம் என்று தெரிவித்தார். 
கொரோனா தொற்றில் இருந்து மீண்டபோதும், பிற உடல் உறுப்புகள் ஒத்துழைக்காத நிலையில், போராடி மாண்டிருக்கிறார் எஸ்.பி. பாலசுப்ரமணியம். 
அவருக்கு தற்போது கொரோனா தொற்று இல்லை என்று மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருக்கிறது. எனவே, பொதுமக்கள் அஞ்சலி செலுத்த தடை இல்லை" என்று மருத்துவர் தெரிவித்தார். 
காற்றில் கலந்து வந்த பாடல்கள் மூலம் எல்லோர் உள்ளங்களிலும் இடம் பிடித்த அவரை காற்றில் கலந்து வந்த வைரஸ் கொண்டு சென்றது.
SPB: சாவுடன் போராடிய அந்த நிமிடங்கள்: பொதுமக்கள் அஞ்சலி செலுத்தலாமா? SPB: சாவுடன் போராடிய அந்த நிமிடங்கள்: பொதுமக்கள் அஞ்சலி செலுத்தலாமா? Reviewed by irumbuthirai on September 25, 2020 Rating: 5

28 வருடங்களின் பின்னர் நடைபெற்ற கூட்டம்

September 24, 2020

28 வருடங்களின் பின்னர் ஏற்றுமதி அபிவிருத்தி சபை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினதும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினதும் தலைமையில் நேற்று ஒன்று கூடியது. 1979ஆம் ஆண்டில் ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் பிரகாரம் ஏற்றுமதி அபிவிருத்தி சபை தாபிக்கப்பட்டது. இச்சட்டத்தின் பிரகாரம் இதன் தலைவர் பதவி ஜனாதிபதிக்கு உரியதாகும். 
ஏற்றுமதியாளர்களை வலுவூட்டி அத்துறையில் உள்ள பிரச்சினைகளை தீர்ப்பது அதன் நோக்கமாகும். கொள்கைகளை வகுத்தல், அங்கீகரித்தல் மற்றும் பரிந்துரைகளை செய்தல் ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் பணிகளாகும். அரச மற்றும் தனியார் துறைகளில் ஏற்றுமதி துறையை அபிவிருத்தி செய்து சர்வதேச சந்தையை வெற்றிகொண்டு மக்கள்மைய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதை விரைவுபடுத்துவது இச்சபையின் விடயப்பரப்புக்கு உட்பட்டதாகும் என ஜனாதிபதி தெரிவித்தார். 
துறையின் பிரச்சினைகளை தீர்த்து மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மீளாய்வு செய்யும் வகையில் ஏற்றுமதி அபிவிருத்திச் சபை மாதத்திற்கு ஒரு தடவை ஒன்றுகூட வேண்டுமென முன்மொழியப்பட்டது. 
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, விமான நிலைய வசதிகளை விரிவுபடுத்தி வர்த்தகர்களையும் முதலீட்டாளர்களையும் கவரும் வகையில் சிறந்த சூழலை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டினார். 
பொருளாதார புத்தெழுச்சிக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பெசில் ராஜபக்ஷ ஏற்றுமதியாளர்களை அதைரியப்படுத்தும் தேவையற்ற சட்டதிட்டங்களை நீக்க வேண்டுமென தெரிவித்தார்.
28 வருடங்களின் பின்னர் நடைபெற்ற கூட்டம் 28 வருடங்களின் பின்னர் நடைபெற்ற கூட்டம் Reviewed by irumbuthirai on September 24, 2020 Rating: 5

உறுதியானது கடல் மாசு: அறிக்கை சட்டமா அதிபரிடம்:

September 24, 2020

MT New Diamond எரிபொருள் கப்பலில் இருந்து கசிந்த எரிபொருள் காரணமாக கடல் மாசடைந்துள்ளதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இந்த குழுவின் அறிக்கை சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது .
உறுதியானது கடல் மாசு: அறிக்கை சட்டமா அதிபரிடம்: உறுதியானது கடல் மாசு: அறிக்கை சட்டமா அதிபரிடம்: Reviewed by irumbuthirai on September 24, 2020 Rating: 5

பரீட்சை திணைக்களத்தின் விசேட அறிவித்தல்

September 24, 2020

எதிர்வரும் மாதம் நடைபெறவிருக்கும் உயர்தர பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை என்பவை தொடர்பான விசேட அறிவித்தலை பரீட்சைத் திணைக்களம் விடுத்துள்ளது. 
அந்தவகையில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 06ம் திகதி நள்ளிரவு முதல் உயர்தர பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளையும் அத்தோடு ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி நள்ளிரவு முதல் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையுடன் தொடர்புடைய அனைத்து விதமான மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகள் தடை செய்யப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சை திணைக்களத்தின் விசேட அறிவித்தல் பரீட்சை திணைக்களத்தின் விசேட அறிவித்தல் Reviewed by irumbuthirai on September 24, 2020 Rating: 5

கல்வி அமைச்சின் விசேட அறிவித்தல்

September 23, 2020

நாட்டிலுள்ள சகல தேசிய பாடசாலைகளுக்கும் கல்வி அமைச்சு விஷேட அறிவித்தலை விடுத்துள்ளது. 
அதாவது சகல தேசிய பாடசாலைகளிலும் இடைநிலை வகுப்புகளிற்கு மாணவர்களை அனுமதிக்கும் செயற்பாடு மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. 
இது தொடர்பான அறிவித்தலை கீழே காணலாம்.


கல்வி அமைச்சின் விசேட அறிவித்தல் கல்வி அமைச்சின் விசேட அறிவித்தல் Reviewed by irumbuthirai on September 23, 2020 Rating: 5

இம்முறை சிறுவர் தினம் கொண்டாட வேண்டிய முறை பற்றி கல்வியமைச்சு வெளியிட்டுள்ள சுற்றுநிறுபம்

September 23, 2020

2020 சிறுவர் தினத்தை எவ்வாறு கொண்டாட வேண்டும் என்ற வழிகாட்டலை கல்வி அமைச்சு சுற்றுநிருபம் மூலம் தெரிவித்துள்ளது. 
இம்முறை சிறுவர் தினத்திற்கான தொனிப் பொருளாக "எங்கள் நாடு எங்கள் கைகளில்" என்பது மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. 
எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி விடுமுறை என்பதனால் அக்டோபர் 2 மற்றும் 5ம் திகதிகளில் மாத்திரம் குறித்த தொனிப்பொருளுக்கு அமைவாக நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். 
இது தொடர்பாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள சுற்று நிருபத்தை பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.
இம்முறை சிறுவர் தினம் கொண்டாட வேண்டிய முறை பற்றி கல்வியமைச்சு வெளியிட்டுள்ள சுற்றுநிறுபம் இம்முறை சிறுவர் தினம் கொண்டாட வேண்டிய முறை பற்றி கல்வியமைச்சு வெளியிட்டுள்ள சுற்றுநிறுபம்   Reviewed by irumbuthirai on September 23, 2020 Rating: 5

கிராம உத்தியோகத்தர்களுக்கு விதிக்கப்பட்ட புதிய நிபந்தனைகள்: சுற்றுநிருபம் வெளியானது:

September 23, 2020

கிராம உத்தியோகத்தர்கள் தமது விடுமுறை நாளை தவிர வாரத்தில் 6 நாட்களும் 24 மணித்தியாலமும் கடமையில் ஈடுபட தயாராக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
அதேபோன்று செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் காலை 08.30 முதல் பி.ப. 04.15 வரையும் சனிக் கிழமைகளில் பிற்பகல் 12: 30 மணி வரையும் கட்டாயம் அலுவலகத்தில் இருக்க வேண்டும். 
திங்கட்கிழமைகளில் பிரதேச செயலகங்களுக்கு செல்ல வேண்டும். 
திங்கட்கிழமை பொதுமக்கள் தினமாக அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டதற்கிணங்க இந்த புதிய நடைமுறை  தொடர்பிலான சுற்றுநிருபமும் வெளியிடப்பட்டுள்ளது. 
இந்த நடைமுறைகள் எதிர்வரும் 1.10.2020 முதல் அமுல்படுத்தப்பட வேண்டும். 
இது தொடர்பில் தமது பிரதேச பொது மக்களுக்கு தெளிவுபடுத்தும் நடவடிக்கையும் கிராம சேவகர்கள் மேற்கொள்ள வேண்டும்.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவித்தலை கீழே காணலாம்.



கிராம உத்தியோகத்தர்களுக்கு விதிக்கப்பட்ட புதிய நிபந்தனைகள்: சுற்றுநிருபம் வெளியானது: கிராம உத்தியோகத்தர்களுக்கு விதிக்கப்பட்ட புதிய நிபந்தனைகள்: சுற்றுநிருபம் வெளியானது: Reviewed by irumbuthirai on September 23, 2020 Rating: 5

21-09-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்

September 23, 2020

21-09-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை (Cabinet Decisions) இங்கு தருகிறோம். 
இதில், 
பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
இதன் முழு வடிவத்தைப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.
21-09-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் 21-09-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on September 23, 2020 Rating: 5

20ற்கு எதிராக மனுத்தாக்கல்: சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படுமா?

September 22, 2020

20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் ஊடாக அடிப்படை உரிமை மீறல் இடம்பெறுவதால் குறித்த சட்டமூலம் பொதுஜன வாக்கெடுப்புடன் நிறைவேற்றப்பட வேண்டும் என தீர்ப்பளிக்குமாறு கோரி உயர் நீதிமன்றில் இன்று மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்டத்தரணி தர்ஷன வேரதுவகேவின் ஊடாக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில், முன்மொழியப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தின் ஊடாக உத்தரவாதமளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகள் மற்றும் பல ஏற்பாடுகள் குறைக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. வழக்கின் பிரதிவாதியாக சட்டமா அதிபர் பெயரிடப்பட்டுள்ளார்.
20ற்கு எதிராக மனுத்தாக்கல்: சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படுமா? 20ற்கு எதிராக மனுத்தாக்கல்: சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படுமா? Reviewed by irumbuthirai on September 22, 2020 Rating: 5

15 நாடுகள் அழைப்பு விடுத்தும் மலேசியாவை ஏன் தேர்ந்தெடுத்தேன்? ஜாகிர் நாயக் விளக்கம்

September 22, 2020

தான் வசிப்பதற்கு மலேசியாவை ஏன் தேர்ந்தெடுத்தது? என்பது தொடர்பான விளக்கத்தை இணைய வழியான கலந்துரையாடல் ஒன்றின் மூலம் ஜாகிர் நாயக் வெளிப்படுத்தியுள்ளதாக BBC செய்தி வெளியிட்டுள்ளது. 
 2016 ஜூலை முதல் இந்திய அரசின் கெடுபிடிகள் தொடங்கியது. தம் மீதான வழக்கு விசாரணைகள் தீவிரம் அடைவதற்கான அறிகுறிகள் தென்படத் துவங்கியன. எனினும் அடுத்த இரு மாதங்களுக்குள் 
13 முதல் 15 நாடுகள் எனக்கு அழைப்பு விடுத்தன. அந்நாடுகளில் தங்குவதற்கும் தங்கள் நாட்டில் தகுந்த பாதுகாப்பு வழங்குவதாகவும் நல்லபடியாக கவனித்துக் கொள்வதாகவும் எனக்கு தெரிவிக்கப்பட்டது. 
ஒவ்வொரு நாடுகளின் சாதக பாதகங்களை ஆராய்ந்து மூன்று நாடுகளை தெரிவு செய்து இறுதியில் மலேசியாவை தேர்ந்தெடுத்தேன். 
 உலகில் உள்ள பெரும்பாலான இஸ்லாமிய நாடுகளில் பிரச்சினைகள் காணப்படுகின்றன. எனவே மோசமானவற்றுள் சிறந்த நாடு (Best of the worst) மலேசியா என்ற அடிப்படையிலும் ஒரு நபர் வாழ்வதற்கு சிறந்த நாடு என்ற வகையிலும் எனது தேர்வு அமைந்தது. 
மலேசியாவை தேர்ந்தெடுத்தமைக்கான காரணங்களை பின்வருமாறு கூறுகிறார் ஜாகிர் நாயக். 
1. மலேசியா போர் பகுதியில் இருந்து வெகு தூரத்தில் அமைந்துள்ளது. பெரும்பாலான இஸ்லாமிய நாடுகள் தற்போது போர் பகுதியில் உள்ளன. மலேசியா அப்படி அல்ல. 
2. தென்கிழக்காசியாவில் அமைந்துள்ளதால் மேற்கத்திய நாடுகளின் நேரடி ஆதிக்கம் மற்றும் கொடுமைகளிலிருந்து மலேசியா விலகி உள்ளது. 
3. தற்போது உலகளாவிய இஸ்லாமிய நாடுகளில் மலேசிய கடவுச்சீட்டு தான் அதிக மதிப்புள்ளது. இதனால் 185 நாடுகளுக்கு விசா இன்றி சென்று வர முடியும். 
4. அரேபிய பிராந்தியத்தில் இல்லாத இஸ்லாமிய நாடுகளிலேயே மலேசியாவில் தான் இஸ்லாம் அதிகமாக பின்பற்றப்படுவதாக கருதுகிறேன். 
5. மலேசியாவில் வாழ்க்கைச் செலவு குறைவு கிட்டத்தட்ட இந்தியாவுக்கு இணையான வாழ்க்கைச் செலவுகள் 
6. மலேசியா மிக அழகான நாடு. இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். குறிப்பாக இங்குள்ள புத்ராஜெயா என்ற நிர்வாக தலைநகர்தான் உலகத்திலேயே மிகச் சிறந்த இஸ்லாமிய நகரம். இஸ்லாமியர்கள் வாழக்கூடிய நகரம் என்பேன். இங்கு இரவு வாழ்க்கை, நடன விடுதிகள் கிடையாது. மதுகூடங்களும் இல்லை. 
 இவற்றையெல்லாம் வைத்து பார்க்கும்போது எனது தெரிவு சரியானது என நினைக்கிறேன் என்றார். 
 ஆனால் இந்தியாவில் 500 ஊழியர்கள் பணியாற்றிய நிலையில் மலேசியாவில் தன்னுடன் இருவர் மட்டுமே இருப்பதாகவும் ஜாகிர் நாயக் தெரிவித்தார்.
15 நாடுகள் அழைப்பு விடுத்தும் மலேசியாவை ஏன் தேர்ந்தெடுத்தேன்? ஜாகிர் நாயக் விளக்கம் 15 நாடுகள் அழைப்பு விடுத்தும் மலேசியாவை ஏன் தேர்ந்தெடுத்தேன்? ஜாகிர் நாயக் விளக்கம் Reviewed by irumbuthirai on September 22, 2020 Rating: 5
Powered by Blogger.