5வது முறையாக ரணிலை எதிர்கட்சி தலைவர் ஆக்குவேன் - மஹிந்த ராஜபக்‌ஷ

ரணிலின் 4 படங்கள் எதிர்க்கட்சித்தலைவர் காரியாலயத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது விரைவில் 5 ஆவது படத்தையும் தொங்கவிட வைக்க வேண்டும் என மஹிந்த ராஜபக்ஷ்வை பார்த்து உதய கம்பன்பில எம்.பி. தெரிவித்தார்.


இன்று உத்தியோகபூர்வமாக எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ் கடமைகளை பாராளுமன்ற கட்டட தொகுதியில் இருக்கும் எதிர்க்கட்சி தலைவரின் காரியாலயத்தில் ஏற்றுக்கொண்டார்


இதன்போது அருகில் இருந்த பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில, பாராளுமன்ற வரலாற்றில் எதிர்க்கட்சி தலைவராக எதிர்க்கட்சித்தலைவர் காரியாலயத்தில் தொங்கவிடப்பட்டிருந்த படங்களை பார்த்து, ரணில் விக்ரமசிங்கவின் 4 படங்கள் இருக்கின்றன. மீண்டும் 5 ஆவது படத்தையும் தொங்கவிட வைக்கவேண்டும் என மஹிந்த ராஜபக்ஷ்வை பார்த்து தெரிவித்தார்.


அதற்கு  எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ், அது விரைவில் இடம்பெறும். அதற்கு தேவையான வேலைத்திட்டங்களை நாங்கள் மேற்கொள்ளவேண்டும். விரைவில் பாராளுமன்றத்தின் இரண்டாம் மாடிக்கு (பிரதமர் காரியாலயத்துக்குசெல்ல பிராத்தியுங்கள் என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
5வது முறையாக ரணிலை எதிர்கட்சி தலைவர் ஆக்குவேன் - மஹிந்த ராஜபக்‌ஷ 5வது முறையாக ரணிலை எதிர்கட்சி தலைவர் ஆக்குவேன் - மஹிந்த ராஜபக்‌ஷ Reviewed by Irumbu Thirai News on January 22, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.