அங்கத்தவர்களின் பெயரோடு வெளிவரவுள்ள வர்த்தமானி


எதிர்வரும் புதன்கிழமை வெளிவரவுள்ள வர்த்தமானியில் அண்மையில் நடந்து முடிந்த எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களின் பெயர்கள் வெளிவரவுள்ளன.  25 சதவீத 

பெண்களின் பிரதிநிதித்துவத்துடன் தமது அங்கத்தவர்களைப் பெயரிட்டு அனுப்புமாறு அந்தந்தக் கட்சிகளுக்கு அறிவிக்கப்பட்டிருப்பதாக காலி மாவட்ட செயலாளர் சோமரத்ன விதானபத்திரண தெரிவித்துள்ளார்.  பெயர்ப் பட்டியலை வர்த்தமானியின் மூலம் அறிவித்த பின்னர், 

பிரதேச சபையின் ஆரம்பக் கூட்டம் நடைபெறும் தினம் அறிவிக்கப்படும். தலைவரும் பெயரிடப்படுவார் என்று காலி மாவட்ட செயலாளர் சோமரத்ன விதானபத்திரண மேலும் தெரிவித்தார். 
(அ.த.தி)
அங்கத்தவர்களின் பெயரோடு வெளிவரவுள்ள வர்த்தமானி அங்கத்தவர்களின் பெயரோடு வெளிவரவுள்ள வர்த்தமானி Reviewed by irumbuthirai on October 13, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.