நள்ளிரவுடன் நிறைவுக்கு வரும் பிரசாரம்.. முதலாவது பெறுபேறு எப்போது வரும்?



எதிர்வரும் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள 8 ஆவது ஜனாதிபதி தேர்தல் தொடர்பான முதல் முடிவை பெரும்பாலும் அன்றைய தினம் 

நள்ளிரவு 12.00 மணிக்கு வெளியிடக்கூடியதாக இருக்கும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல் விதிமுறைகளை மீறிய ஊடகங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. தேர்தல் முடிந்தவுடன் அதற்கான 

நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இதேவேளை ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவடைகின்றன. இதற்கு அமைவாக இன்று நள்ளிரவிற்கு பின்னர் ஜனாதிபதி தேர்தலுக்கான எந்தவித பிரசார நடவடிக்கைகளையும் மேற்கொள்வது தேர்தல் சட்டவிதிகளுக்கு அமைவாக தடை என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
(அ.த.தி)
நள்ளிரவுடன் நிறைவுக்கு வரும் பிரசாரம்.. முதலாவது பெறுபேறு எப்போது வரும்? நள்ளிரவுடன் நிறைவுக்கு வரும் பிரசாரம்.. முதலாவது பெறுபேறு எப்போது வரும்? Reviewed by irumbuthirai on November 13, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.