மாணவர்களுக்கான புதிய திட்டம் : வார இறுதி நாட்களில் டிப்ளோமா, உயர் டிப்ளோமா பாடநெறிகள்



1,000 மாணவர்களுக்கு இந்த 2020 ஆம் ஆண்டில்  கணனி டிப்ளோமா அல்லது உயர்தர டிப்ளோமா பாடநெறியை   வார இறுதி நாட்களில் 

தொடர்வதற்கு ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும் என்று தகவல், தொடர்பாடல் தொழிநுட்பம், உயர்கல்வி, தொழிநுட்ப புத்தாக்க அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் ஹோமாகம தியகமவில் அமைந்துள்ள தொழில்நுட்ப நிறுவனத்திற்கு அமைச்சர் கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். அங்கு கலந்துறையாடிய போதே இவ்வாறு தெரிவித்தார். 
இது தொடர்பான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். இதேவேளை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய சகல மாணவர்களுக்கும், பல்கலைக்கழகத்திற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதே ஜனாதிபதியின் எதிர்பார்ப்பு என்றும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
அ.த.தி.
மாணவர்களுக்கான புதிய திட்டம் : வார இறுதி நாட்களில் டிப்ளோமா, உயர் டிப்ளோமா பாடநெறிகள் மாணவர்களுக்கான புதிய திட்டம் : வார இறுதி நாட்களில் டிப்ளோமா, உயர் டிப்ளோமா பாடநெறிகள் Reviewed by irumbuthirai on January 21, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.