பொலிஸில் பதிவு செய்வதற்கான காலம் இன்று நிறைவு



கடந்த மார்ச் 16 ஆம் திகதிக்கு முன்னர் வெளிநாடுகளில் இருந்து  நாட்டிற்குள் வந்தவர்கள் பொலிஸில் பதிவு செய்வதற்கான இறுதி தினம் நண்பகல் 12 மணியுடன் நிறைவடைகிறது என சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். 
இவர்கள் 1933 அல்லது 119 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் தம்மை பதிவு செய்து கொள்ள வேண்டும். தங்களை பொலிஸில் பதிவு செய்யத் தவறினால், அவர்கள் மீது குற்றவியல் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார். 
(அ.த.தி)
பொலிஸில் பதிவு செய்வதற்கான காலம் இன்று நிறைவு பொலிஸில் பதிவு செய்வதற்கான காலம் இன்று நிறைவு Reviewed by irumbuthirai on April 01, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.