தரம் 6 க்கான அனுமதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா? கல்வி அமைச்சு செயலாளரின் விளக்கம்


தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளுக்கமைய பாடசாலைகளுக்கு தரம் 6 ற்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கையில் மாற்றம் மேற்கொள்ளப்படவில்லை என்று கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். மேலும்,
மாணவர்களின் எண்ணிக்கையையோ பாடசாலை வகுப்பறையின் அளவையோ குறைப்பதற்கான எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை. பிள்ளைகளுக்கு அநீதி ஏற்பட இடமளிக்கப்பட மாட்டாது. புலமைப்பரிசில் பரீட்சையில் ஆகக்கூடுதலான புள்ளிகள் கடந்த 05 ஆண்டுகளில் 
பெற்றுக் கொள்ளப்பட்டிருந்தன. இருப்பினும் பாடசாலைகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நடைமுறையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. 
இது தொடர்பிலான மேலதிக விபரங்களை கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பார்வையிடலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
தரம் 6 க்கான அனுமதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா? கல்வி அமைச்சு செயலாளரின் விளக்கம் தரம் 6 க்கான அனுமதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா? கல்வி அமைச்சு செயலாளரின் விளக்கம் Reviewed by irumbuthirai on January 24, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.