சீனப் பெண்ணுடன் ஆரம்பித்த இலங்கை கொரோனாவுக்கு இன்றுடன் ஒரு வருட பூர்த்தி..


இலங்கையில் முதல் கொரோனா தொற்றாளர் இனங்காணப்பட்டு இன்றுடன் சரியாக ஒரு வருடம் பூர்த்தியாகியுள்ளது. கடந்த வருடம் ஜனவரி மாதம் 
27 ஆம் திகதி சீனப்பெண் ஒருவர் முதல் தொற்றாளராக இங்கு இனம் காணப்பட்டார். 
இதைத்தொடர்ந்து சுகாதாரத்துறை மக்களுக்கு விடுத்த அறிவிப்பில், பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டது. 
 இன்றைய தினம் சரியாக ஒரு வருடம் நிறைவடைந்த நிலையில், 59,922 தொற்றாளர்கள், 51,046 குணமடைந்தோர், 288 மரணங்கள் என்ற அடிப்படையில் கொரோனாவுக்கு எதிரான போராட்ட பாதையில் இலங்கை பயணித்துக் கொண்டிருக்கிறது.
சீனப் பெண்ணுடன் ஆரம்பித்த இலங்கை கொரோனாவுக்கு இன்றுடன் ஒரு வருட பூர்த்தி.. சீனப் பெண்ணுடன் ஆரம்பித்த இலங்கை கொரோனாவுக்கு இன்றுடன் ஒரு வருட பூர்த்தி.. Reviewed by irumbuthirai on January 27, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.