பாடசாலைகளை சாதாரண முறையில் நடத்த அனுமதி!


கொரோனா பரவலைக் கருத்தில்கொண்டு பாடசாலைகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. மாணவர்களும் குழுக்களாக பிரிக்கப்பட்டு பகுதியளவிலேயே பாடசாலைக்கு அழைக்கப்படுகின்றனர். 

இந்நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பாடசாலைகளை சாதாரண முறையில் நடத்திச் செல்ல சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்தன அனுமதி வழங்கியுள்ளார். 
 
அந்தவகையில் திங்கட்கிழமை முதல் சகல மாணவர்களும் பாடசாலைக்கு அழைக்கப்படுவர். பகுதி அளவில் மாணவர்கள் அழைக்கப்படும் பொழுது மாணவர்களின் கல்வி நிலை பாரிய அளவில் பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

பாடசாலைகளை சாதாரண முறையில் நடத்த அனுமதி! பாடசாலைகளை சாதாரண முறையில் நடத்த அனுமதி! Reviewed by Irumbu Thirai News on January 05, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.