அடுத்த வருடம் முதல் உயர்தர பரீட்சையில் புதிய பாடம்!


அடுத்த வருடம் (2023) முதல் நடைபெறும் உயர்தரப் பரீட்சையில் 

கொரிய மொழியும் ஒரு பாடமாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜி எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். 
 
தென்கொரியாவுக்கு விஜயம் செய்த அமைச்சர் அங்கு பிரதி பிரதமரும் கல்வி அமைச்சருமான யூ யூன் ஹையை தலைநகர் சியோலில் சந்தித்தவேளை இதனை தெரிவித்துள்ளார். 
 
இதன்போது தென்கொரியாவில் பணிபுரியும் 22,000 இலங்கையர்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் ஜி எல் பீரிஸ், கொரிய மொழி கற்கைகள் 

இலங்கையில் பிரபல்யம் அடைந்து வருவதை சுட்டிக்காட்டினார். பதிலளித்த பிரதிப் பிரதமர், இலங்கையின் தொழில்சார் கல்வி மற்றும் பயிற்சிகளுக்கு உதவி வழங்குவது தொடர்பில் கொரியா பரிசீலிக்கும் என தெரிவித்தார்.
அடுத்த வருடம் முதல் உயர்தர பரீட்சையில் புதிய பாடம்! அடுத்த வருடம் முதல் உயர்தர பரீட்சையில் புதிய பாடம்! Reviewed by Irumbu Thirai News on January 06, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.