இலங்கையின் 17வது பல்கலைக்கழகம் ஜனாதிபதியால் திறப்பு!


இலங்கையின் 17வது பல்கலைக்கழகமான வவுனியா பல்கலைக்கழகம் ஜனாதிபதியினால் இன்று(11) திறந்து வைக்கப்பட்டுள்ளது. 
 
வவுனியா பம்பைமடு எனும் பகுதியில் அமைந்துள்ள இந்த பல்கலைக்கழகமானது வட மாகாணத்தின் இணைந்த பல்கலைக்கழக கல்லூரியாக 1991இல் உருவாக்கப்பட்டு பின்னர் யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகமாக 1997 இல் தரமுயர்த்தப்பட்டது. 
 
அதன் பின்னர் இலங்கையின் 17ஆவது பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தப்பட்டு அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் கடந்த வருடம்(2021) ஆகஸ்ட் 1ம் திகதி வெளியிடப்பட்டிருந்தது.
இலங்கையின் 17வது பல்கலைக்கழகம் ஜனாதிபதியால் திறப்பு! இலங்கையின் 17வது பல்கலைக்கழகம் ஜனாதிபதியால் திறப்பு! Reviewed by Irumbu Thirai News on February 11, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.