உயர்தர பரீட்சை பெறுபேறு, பரீட்சைக்கான திகதிகள், விண்ணப்ப திகதிகள் தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளரின் அறிவித்தல்


உயர்தர பரீட்சை பெறுபேறுகளை வெளியிடல் மற்றும் இந்த வருடத்திற்கான பரீட்சைகளுக்கான விண்ணப்பம் கோரல் மற்றும் பரீட்சைகள் நடத்தப்படும் திகதிகள் என்பன தொடர்பாக பல்வேறு விடயங்களை பரீட்சைகள் ஆணையாளர் எல்எம்டி தர்மசேன தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் எதிர்வரும் மாதம் (ஆகஸ்ட்) நடுப்பகுதி அளவில் உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் என நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.


தற்போதைய பல்வேறு நெருக்கடி நிலைமைகளின் காரணமாக பெறுபேறுகளை வெளியிடுவது தாமதமாகி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.


மேலும் இந்த வருடத்திற்குரிய உயர்தர பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 28ஆம் தேதி ஆரம்பமாகி டிசம்பர் 23ஆம் தேதி வரை நடைபெறும். அதற்கான விண்ணப்பங்கள் இந்த மாதம் 18 முதல் ஆகஸ்ட் மாதம் 19 ஆம் தேதி வரை அனுப்பலாம்.


இதேவேளை இந்த வருடத்திற்குரிய தரம் 05 புலமை பரிசில் பரீட்சை நவம்பர் 27ஆம் தேதி நடாத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.


மேலும் இந்த வருடத்திற்குரிய சாதாரண பரீட்சை அடுத்த வருட முற்பகுதியில் நடைபெறும்.


இந்த பரீட்சைகள் தீர்மானிக்கப்பட்டவை நாட்டின் நிலைமைகள் சுமுகமானது என்ற அடிப்படையில். நிலைமைகள் மாறினால் இந்த பரீட்சைக்கான திகதிகளையும் மாற்ற வேண்டி ஏற்படும்.


கடந்த காலங்களில் பல்வேறு நெருக்கடிகளுக்கும் சவால்களுக்கும் முகம் கொடுத்து பிள்ளைகளின் பரீட்சைகளை நடத்த பரீட்சை திணைக்களத்தால் முடிந்தது. அதே மாதிரி எதிர்வரும் காலங்களிலும் பிள்ளைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் இந்த பரீட்சைகள் நடாத்தப்படும். 


எவ்வாறாயினும் கொரோனா பரவல் காரணமாக இரண்டு வருடங்களாக சிக்கலடைந்த பரீட்சை நேரசூசி எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு முதல் உரிய முறைப்படி முன்னர் செய்யப்பட்ட விதத்திலேயே நடத்தப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

உயர்தர பரீட்சை பெறுபேறு, பரீட்சைக்கான திகதிகள், விண்ணப்ப திகதிகள் தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளரின் அறிவித்தல்  உயர்தர பரீட்சை பெறுபேறு, பரீட்சைக்கான திகதிகள், விண்ணப்ப திகதிகள் தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளரின் அறிவித்தல் Reviewed by Irumbu Thirai News on July 15, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.