பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் திகதியை அறிவித்தது கல்வி அமைச்சு! (அறிவித்தல் இணைப்பு)


நாட்டிலுள்ள அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் ஆரம்பமாகும் திகதியை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 

அந்த வகையில் இம்மாதம் 21ஆம் தேதி வியாழக்கிழமை பாடசாலைகள் மீள ஆரம்பமாகும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது. 


கல்வி அமைச்சின் கடந்த வார அறிவித்தலின் பிரகாரம் இம்மாதம் 18 ஆம் தேதி அதாவது திங்கட்கிழமை பாடசாலைகள் ஆரம்பமாக இருந்தன.


இன்று காலை இது தொடர்பில் Zoom தொழில்நுட்பத்தின் ஊடாக நடைபெற்ற கூட்டத்தில் கல்வி அமைச்சின் செயலாளர், மேலதிக செயலாளர், தேசிய பாடசாலைகளுக்கான பணிப்பாளர், மாகாண கல்வி செயலாளர், மாகாண கல்வி பணிப்பாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர். 


தற்போதைய எரிபொருள் நெருக்கடி மற்றும் போக்குவரத்து பிரச்சினை என்பவற்றை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


கல்வி அமைச்சின் குறித்த அறிவித்தலைக் கீழே காணலாம்.



பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் திகதியை அறிவித்தது கல்வி அமைச்சு! (அறிவித்தல் இணைப்பு) பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் திகதியை அறிவித்தது கல்வி அமைச்சு! (அறிவித்தல் இணைப்பு) Reviewed by Irumbu Thirai News on July 15, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.