பல்கலைக்கழகத்திற்கு இம்முறை விண்ணப்பித்தோர்



2021 ற்குரிய உயர்தர பரீட்சை பெறுபேறுகள் அண்மையில் வெளியிடப்பட்டன. இந்த பெறுபேறுகளின் அடிப்படையில் 171,497 பேர் விண்ணப்பிக்க தகுதி பெற்றிருந்தனர். 

அந்த வகையில் இம்முறை பல்கலைக்கழக அனுமதிக்காக சுமார் 93,000 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

இந்த விண்ணப்பங்களிலிருந்து சுமார் 45,000 பேர் இம்முறை பல்கலைக்கழகத்திற்கு இணைத்துக் கொள்ளப்பட உள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். 

2,035 பேர் மருத்துவ பீடத்திற்கும் 2,238 பேர் பொறியியற் பீடத்திற்கும் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


முன்னைய செய்திகள்:






பல்கலைக்கழகத்திற்கு இம்முறை விண்ணப்பித்தோர் பல்கலைக்கழகத்திற்கு இம்முறை விண்ணப்பித்தோர் Reviewed by Irumbu Thirai News on October 03, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.