இம்ரான் கானுக்கு சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்!



பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

தோஷகானா எனப்படும் ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் அவருக்கு இவ்வாறு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

இஸ்லாமாபாத் மாவட்ட மற்றும் செஷன் நீதிமன்றம் இவ்வாறு 3 வருட சிறை தண்டனை விதித்ததோடு ஒரு லட்சம் பாகிஸ்தானிய ரூபாய் அபராதமாகவும் விதிக்கப்பட்டுள்ளது. 

கடந்த வருடம் ஏப்ரல் மாதம் பாராளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்த இம்ரான் கான், பிரதமர் பதவியை இழந்தார். அதன் பின்னர் அவருக்கு நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன அதில் ஊழல் குற்றச்சாட்டு வழக்குகளும் அடங்கும். 

எவ்வாறாயினும் இம்ரான் கான் தன் மீதான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து மறுத்து வருகிறார். மேலும் பொது மக்களிடையே அவருக்கான ஆதரவு அதிகரித்திருப்பதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.


Previous:


இம்ரான் கானுக்கு சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்! இம்ரான் கானுக்கு சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்! Reviewed by Irumbu Thirai News on August 05, 2023 Rating: 5

No comments:

Powered by Blogger.