மாயமான இலவச பாடநூல்கள்! ஐந்து பேர் கைது! தொடரும் விசாரணை....



இலவச பாடப் புத்தகங்களின் காணாமல் போன சம்பவம் குறித்து விசாரிக்கத் துறைசார் விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகக் பிரதி கல்வி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்தார். 

இந்த விவகாரம் தொடர்பாகக் பொலிஸ் விசாரணைகளும் நடைபெற்று வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார். 

பொலிஸ் விசாரணைகளின்படி, பாடப் புத்தகங்கள் போக்குவரத்திற்காக ஒப்படைக்கப்பட்ட பின்னர், முதல் சந்தேகநபர் குறித்த தொகுதி புத்தகங்களை அலவ்வவில் உள்ள ஓர் இடத்திற்கு விற்றுள்ளார். பின்னர், அந்த நிறுவனத்தின் உரிமையாளர் அந்தப் புத்தக இருப்பை நாரம்மலவில் உள்ள ஒரு நிலையத்திற்கு மறுவிற்பனை செய்துள்ளார்; அங்கிருந்து அவை பின்னர் வத்தளைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன. 

கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளுக்கு விநியோகிப்பதற்காக, கல்வி வெளியீட்டுத் திணைக்களம் மே 24 ஆம் திகதி இப்பாடப்புத்தகங்களை ஒப்படைத்திருந்தது. இத்தொகுப்பில் தமிழ் மொழிப் பயிற்சிப் புத்தகங்கள் மற்றும் மூன்றாம் தவணைக்கான முதலாம் வகுப்புப் பாடப் புத்தகங்கள் ஆகியவை அடங்கியிருந்தன. 

இவற்றின் பெறுமதி 800,000 ரூபாய்க்கும் அதிகமாகும். இச்சம்பவம் தொடர்பாக  இதுவரை  ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் முடியும் வரை அவர்கள் ஆகஸ்ட் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ்  உறுதிப்படுத்தியது.
மாயமான இலவச பாடநூல்கள்! ஐந்து பேர் கைது! தொடரும் விசாரணை.... மாயமான இலவச பாடநூல்கள்! ஐந்து பேர் கைது! தொடரும் விசாரணை.... Reviewed by Irumbu Thirai News on August 17, 2026 Rating: 5

No comments:

Powered by Blogger.