ஊடகங்கள் குழந்தைகளின் கருத்துகளை அவர்களின் பெற்றோர் அல்லது ஆசிரியர்களின் அனுமதியின்றி பதிவு செய்வதையோ அல்லது வெளியிடுவதையோ தடை செய்து கல்வி அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆண்டு 5ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை எழுதிய சில மாணவர்கள், ஊடகங்களுக்கு வழங்கிய கருத்துகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு கேலிக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவங்களை அடுத்தே இந்த எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
பரீட்சைக்குப் பின் பிள்ளைகள் வழங்கிய கருத்துகள் மேற்கோள் காட்டப்பட்டு, அவர்களை ஏளனத்திற்கு ஆளாக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் பகிரப்படுவதை அமைச்சு அவதானித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெற்றோர், பாதுகாவலர் அல்லது ஆசிரியர்களின் அனுமதியின்றி பிள்ளைகளின் கருத்துகளைப் பெறவோ, பதிவு செய்யவோ அல்லது ஒலிபரப்பவோ ஊடக நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை என அமைச்சு வலியுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், இவ்வாறான குழந்தைகள் தொடர்பான வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட ஊடக நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் கல்வி அமைச்சு எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிள்ளைகளின் கருத்துக்களை வெளியிடல்: ஊடகங்களுக்கு கல்வி அமைச்சு விடுத்த எச்சரிக்கை!
Reviewed by Irumbu Thirai News
on
August 16, 2026
Rating:
Reviewed by Irumbu Thirai News
on
August 16, 2026
Rating:

No comments: