விடைத்தாள் திருத்தும் பணி: விண்ணப்ப காலம் நீடிப்பு!

October 21, 2022


2022 உயர் தர பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிக்காக விண்ணப்பங்களை ஏற்பதற்கான திகதி நீடிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 4ம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Online முறையில் விண்ணப்பிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.

https://onlineexams.gov.lk/eic/index.php/clogin/


Previous:

பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்குள் இணைப்பது தொடர்பாக கல்வி அமைச்சரின் அறிவித்தல்!


Annual Transfer Orders (Combined Service) – 2023


14-10-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 14-10-2022

விடைத்தாள் திருத்தும் பணி: விண்ணப்ப காலம் நீடிப்பு! விடைத்தாள் திருத்தும் பணி: விண்ணப்ப காலம் நீடிப்பு! Reviewed by Irumbu Thirai News on October 21, 2022 Rating: 5

பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்குள் இணைப்பது தொடர்பாக கல்வி அமைச்சரின் அறிவித்தல்!

October 21, 2022

நேற்றைய தினம்(20) பாராளுமன்றத்தில் உரையாற்றிய கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த பின்வரும் விடயங்களை தெளிவுபடுத்தினார். 

தற்போதைய நிலையில் அபிவிருத்தி உத்தியோகத்தவர்களாக கடமையாற்றுபவர்கள் மற்றும் ஏனைய துறைகளில் கடமையாற்றும் பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு உள்வாங்குவதற்காக போட்டிப் பரீட்சை நடத்துவது தொடர்பில் எதிர்வரும் வாரம் முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். 

அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை போக்குவரத்து சபையில் ஒரு பஸ்ஸுக்கு 8 சாரதிகள் உள்ளனர். பெற்றோலிய கூட்டத்தாபனத்திலும் அதிகமான ஊழியர்கள் உள்ளனர். ஆனால் உயர்கல்வி வழங்கக்கூடிய பல்கலைக்கழகத்தில் 18 மாணவர்களுக்கு ஒரு விரிவுரையாளர் இருக்க வேண்டிய நிலையில் 46 மாணவர்களுக்கு ஒரு விரிவுரையாளர் உள்ளார்.

200 பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பட்டப்பின் படிப்பிற்காக வெளிநாடு சென்று திரும்பி வரவில்லை. மேலும் பட்டப்பின் படிப்பிற்காக வெளிநாடு சென்ற 180 விரிவுரையாளர்கள் தமது பட்டப்பின்படிப்பை இடைநிறுத்தி உள்ளனர். 

அண்மையில் அபிவிருத்தி உத்தி உத்தியோகத்தர்களாக நியமனம் வழங்கப்பட்ட பட்டதாரிகளில் முதலாம் இரண்டாம் வகுப்பை பெற்ற பட்டதாரிகளும் பிரதேச செயலகங்களில் முகாமைத்துவ உதவியாளர்களின் பணிகளை செய்கின்றனர். இன்னும் சிலர் பட்டதாரி அல்லாதவர்களின் பணிகளை செய்கின்றனர். அவர்களுக்கு கதிரை மேசைகள் கூட சில இடங்களில் வழங்கப்படவில்லை. அவர்களின் கல்வித் தகுதி முறையாக பயன்படுத்தப்பட வேண்டும். இதற்காக போட்டி பரீட்சை நடத்தி ஆசிரியர் சேவைக்குள் உள்ளீர்க்கலாம் எனவும் அவர் தெரிவித்தார். 

மேலும் முதலாம் வகுப்பை பெற்ற பட்டதாரிகளை தத்தமது பல்கலைக்கழக பீடங்களுக்கு உள்வாங்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இதேவேளை 2010 முதல் 2022 வரையான காலப்பகுதியில் மொத்தமாக 2457 விரிவுரையாளர்கள் பட்டப்பின் படிப்பிற்காக வெளிநாடு சென்றுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.



பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்குள் இணைப்பது தொடர்பாக கல்வி அமைச்சரின் அறிவித்தல்! பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்குள் இணைப்பது தொடர்பாக கல்வி அமைச்சரின் அறிவித்தல்! Reviewed by Irumbu Thirai News on October 21, 2022 Rating: 5

Annual Transfer Orders (Combined Service) – 2023

October 16, 2022

Annual Transfer Orders (Combined Service) – 2023 
வருடாந்த இடமாற்றக் கட்டளைகள் (இணைந்த சேவைகள்) - 2023
 
 
Government Translators’ Service  (அரசாங்க மொழிபெயர்ப்பாளர் சேவை) Click here
 
Sri Lanka Information and Communication Technology - Class II  (இலங்கை தகவல், தொடர்பாடல் தொழிநுட்பச் சேவை - வகுப்பு II) Click here

Sri Lanka Information and Communication Technology - Class III (இலங்கை தகவல், தொடர்பாடல் தொழிநுட்பச் சேவை - வகுப்பு III) Click here
 
Development Officers’ Service (அபிவிருத்தி அலுவலர் சேவை) Click here
 
Management Service Officers’ Service (முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவை) Click here
 
Combined Drivers’ Service (இணைந்த சாரதிகள் சேவை) Click here
 
Office Employees’ Service (அலுவலக ஊழியர் சேவை) Click here
 
 
Click the link below for Covering Letters:
 
 
 
 
முன்னைய செய்திகள்:

 

Annual Transfer Orders (Combined Service) – 2023 Annual Transfer Orders  (Combined Service) – 2023 Reviewed by Irumbu Thirai News on October 16, 2022 Rating: 5

14-10-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 14-10-2022

October 16, 2022

14-10-2022 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 
 
குறிப்பு: தற்போதைய நிலையில் (16-10-2022: 01:15 AM) ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் மாத்திரமே வர்த்தமானி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் தமிழ் மொழி மூல வர்த்தமானிக்கான லிங்கையும் தந்துள்ளோம். அரச அச்சக திணைக்களத்தால் தமிழ் மொழி மூலம்  பதிவேற்றம் செய்யப்பட்டதும் குறித்த லிங்கில் சென்று பார்வையிடலாம். எனவே மீண்டும் மீண்டும் முயற்சி செய்து பாருங்கள். 
 
 
தமிழில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
சிங்களத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
 
 
முன்னைய வர்த்தமானி அறிவித்தலுக்கு செல்ல...
 
14-10-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 14-10-2022 14-10-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 14-10-2022 Reviewed by Irumbu Thirai News on October 16, 2022 Rating: 5

Green Card விண்ணப்பம்: பொறுமையாக செயற்படுமாறு அமெரிக்க தூதரகம் ஆலோசனை!

October 16, 2022


 
2024 ஆம் வருடத்திற்கான அமெரிக்க பன்முக விசாவிற்கு தற்போது, உலகளாவிய ரீதியில் பலர் விண்ணப்பித்து வருகின்றனர். 

இந்த நிலையில், ஒரே தடவையில் இவ்வாறு பலர் விண்ணப்பிப்பதினால் குறித்த இணைய தளத்தை அணுகும் போது சேவை தடங்கல் ஏற்படலாம் என அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.

எனவே தயவுசெய்து பொறுமையாக செயல்படுமாறும் , தொடர்ந்து முயற்சி செய்யுமாறும் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது. 

Green Card ற்கான விண்ணப்பங்கள் அக்டோபர் 05 தொடக்கம் நவம்பர் 08 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும். மேலும் சர்வதேச ரீதியிலிருந்து சுமார் 50 ஆயிரம் பேர் வரை தெரிவு செய்யப்படுவார்கள் எனவும் தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது. 
 
கிரீன் கார்ட் விண்ணப்பத்திற்கு செல்ல /
Click the link below for the Green Card Application: 




முன்னைய செய்திகள்:
 

 
Green Card விண்ணப்பம்: பொறுமையாக செயற்படுமாறு அமெரிக்க தூதரகம் ஆலோசனை! Green Card விண்ணப்பம்: பொறுமையாக செயற்படுமாறு அமெரிக்க தூதரகம் ஆலோசனை! Reviewed by Irumbu Thirai News on October 16, 2022 Rating: 5

சித்திரம் மற்றும் சிற்ப காப்பு தொடர்பான இலவச கற்கை நெறி

October 15, 2022

சித்திரம் மற்றும் சிற்ப காப்பு தொடர்பான இலவச டிப்ளோமோ பாடநெறிக்கான விண்ணப்பங்கள் கிராமிய கலைகள் நிலையத்தால் கோரப்பட்டுள்ளது. 

கற்கை நெறியின் இலக்கு: 
இலங்கையின் கலாசார உரிமைகளை அழியாது பாதுகாத்தல், அழிவுக்குள்ளாகிய மற்றும் உள்ளாகி வரும் கலாசார உரிமைகளை பாதுகாத்தல் அவற்றை புனரமைத்தல் மற்றும் படைப்பாற்றல் கொண்ட கலைஞர்களை உருவாக்குதல் அதன் மூலம் அவர்களுக்கான நிரந்தர மற்றும் சிறப்பான பொருளாதாரம் ஒன்றை கட்டியெழுப்புதல். 

காலம்: ஒரு வருடம். 

கட்டணம்: இலவசம். 

விண்ணப்பிப்பதற்கான தகைமைகள்: 

விண்ணப்பதாரி 18 - 45 வயதுக்குட்பட்டவராக இருத்தல் வேண்டும். 

சாதாரண தரத்தில் சித்திரப் பாடத்தில் சித்தியடைந்து இருக்க வேண்டும். 


தெரிவு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் நடைமுறை மற்றும் கோட்பாட்டு ரீதியில் ஒரு வருட காலம் பயிற்சி பெறுதல் வேண்டும். 

அடிப்படை தகைமைகளை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரிகள் நடைமுறை பரீட்சையொன்றின் பின் இணைக்கப்படுவதோடு பரீட்சை குழுவின் முடிவே இறுதியானதாகும். 

விண்ணப்பங்களை மின்னஞ்சல் முறையில் அனுப்ப...

விண்ணப்பங்களை பதிவு தபாலில் அனுப்ப... 

பணிப்பாளர் நாயகம். 
கிராமிய கலைகள் நிலையம். 
பெலவத்தை, 
பத்தரமுல்லை. 
(கடித உரையின் இடது பக்க மேல் மூலையில் கற்கை நெறியின் பெயரை குறிப்பிட வேண்டும்.)

கூகுள் விண்ணப்ப படிவத்தை whatsapp முறையில் பெற்றுக் கொள்ள... 
07534188888. 

மேலதிக விவரங்களுக்கு... 
0112786716 

கற்கை நெறி ஆரம்பமாகும் உத்தேச திகதி: 
15-11-2022. 

விண்ணப்ப முடிவு திகதி: 25-10-2022.



முன்னைய செய்திகள்:
 

 
சித்திரம் மற்றும் சிற்ப காப்பு தொடர்பான இலவச கற்கை நெறி சித்திரம் மற்றும் சிற்ப காப்பு தொடர்பான இலவச கற்கை நெறி Reviewed by Irumbu Thirai News on October 15, 2022 Rating: 5

மாணவர்கள் பாடசாலையை விட்டு வெளியேறும் அபாயம்! ஆய்வில் வெளியான தகவல்!

October 15, 2022


இலங்கையில் மாணவர்கள் பாடசாலையை விட்டு வெளியேறும் அபாயம் அதிகரித்துள்ளதாக அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. 

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் என்பன இணைந்து இலங்கையில் நிலவும் சமூக பொருளாதார நெருக்கடியின் தாக்கங்களை கண்டறிய அண்மையில் ஆய்வினை மேற்கொண்டன. 

11 மாவட்டங்களில் 2,871 குடும்பங்கள் மற்றும் தோட்டத்துறையைச் சேர்ந்த 300 குடும்பங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 
இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் 60 வீதமானோர் தமது பிள்ளைகள் பாடசாலைகளை விட்டு வெளியேறும் அபாயம் குறித்து அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இதற்குரிய பிரதான காரணம் இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி என தெரிய வந்துள்ளது. 

மேலும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 2,871 குடும்பங்களில் 34 வீதமான குடும்பங்கள் பொருளாதார நெருக்கடியினால் தமது பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 10 பெருந்தோட்டங்களை சேர்ந்த 300 குடும்பங்களில் 7 சதவீதமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. 

கொரோனா பரவல் காரணமாக அடிக்கடி பாடசாலைகள் மூடப்பட்டன. இதேவேளை இந்த வருட தொடக்கத்திலிருந்து இலங்கை எதிர்கொண்ட கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு, போக்குவரத்தை பிரச்சினை என்பவற்றினாலும் பாடசாலைகள் அடிக்கடி மூடப்பட்டன. Online கல்வி நடவடிக்கைகளும் சகலரையும் முறையாக சென்றடையவில்லை. தொழில்நுட்ப இடைவெளி காரணமாக இதில் கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். 

இலங்கை சட்டத்தின் படி 16 வயதிற்குட்பட்ட அனைவரும் கல்வி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் 18 வயதுக்குட்பட்ட சகலரும் மாணவர்களாகவே கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.



முன்னைய செய்திகள்:




மாணவர்கள் பாடசாலையை விட்டு வெளியேறும் அபாயம்! ஆய்வில் வெளியான தகவல்! மாணவர்கள் பாடசாலையை விட்டு வெளியேறும் அபாயம்! ஆய்வில் வெளியான தகவல்! Reviewed by Irumbu Thirai News on October 15, 2022 Rating: 5

10-10-2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்

October 13, 2022

10-10-2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்களை இங்கு தருகிறோம். இதில் பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
 
முன்னைய அமைச்சரவை கூட்ட தீர்மானங்களைப் பார்வையிட...
 
 
 
முன்னைய செய்திகள்:
 
 
10-10-2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் 10-10-2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் Reviewed by Irumbu Thirai News on October 13, 2022 Rating: 5

07-10-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 07-10-2022

October 13, 2022

07-10-2022 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். இதில் முக்கிய விடயங்கள் அடங்கியுள்ளன. 
 
தமிழில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
சிங்களத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
 
முன்னைய வர்த்தமானி அறிவித்தலுக்கு செல்ல...
 
 
 
 
முன்னைய செய்திகள்:

 

 
07-10-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 07-10-2022 07-10-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 07-10-2022 Reviewed by Irumbu Thirai News on October 13, 2022 Rating: 5

தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளருக்கான சான்றிதழ் பாடநெறி (இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம்)

October 08, 2022


தொலைக்காட்சி ஊடகத்துறைக்குள் பிரவேசிக்க ஓர் அரிய சந்தர்ப்பம்...

இலங்கையின் தேசிய தொலைக்காட்சியான ரூபவாஹினி மற்றும் நேத்ரா அலைவரிசை என்பன இணைந்து நடத்தும் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளருக்கான சான்றிதழ் பாடநெறிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. 

இந்த பாட நெறியானது மூன்றாம் நிலை கல்வி மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டது. 

மொழி மூலம்: தமிழ்.

காலம்: 06 மாதங்கள். 

கட்டணம்: தவணை அடிப்படையில் செலுத்தலாம். 

வயதெல்லை: 18 வயதுக்கு மேல். 

திரை தகுதிதான் தேர்வு இடம்பெறும். 

விண்ணப்பங்களை மின்னஞ்சல் மூலம் அனுப்ப... 
re.slrupavahini.gmail.com

தபால் மூலம் அனுப்ப... 
பிரிவு தலைவர்.
ஆய்வு மற்றும் பயிற்சி பிரிவு,
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம்.
கொழும்பு - 07.

மேலதிக விபரங்களுக்கு: 
011-2580137 / 077-3419252.

விண்ணப்பத்தை பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.





முன்னைய செய்திகள்:






தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளருக்கான சான்றிதழ் பாடநெறி (இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம்) தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளருக்கான சான்றிதழ் பாடநெறி (இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம்) Reviewed by Irumbu Thirai News on October 08, 2022 Rating: 5

முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் பதவிக்கு பொருத்தமான உத்தியோகத்தரை நியமித்தல் (அறிவித்தல் கடிதம் இணைப்பு)

October 08, 2022


புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் உள்ள முஸ்லிம் சமய மற்றும் கலாசார திணைக்களத்தின் நிருவாக தலைமை பணிப்பாளர் பதவி இலங்கை நிர்வாக சேவை தரம் 1 ஐ சேர்ந்த பதவியாகும் என்பதுடன் அது தற்போது வெற்றிடமாக உள்ளது. 
 
இந்த பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 2022-10-31 ற்கு முன் விண்ணப்பத்தை பொது நிர்வாக அமைச்சின் செயலாளருக்கு அனுப்ப வேண்டும். 
 
இது தொடர்பாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளரால் வெளியிடப்பட்ட அறிவித்தல் கடிதத்தைப் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 



Previous:

 
 
முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் பதவிக்கு பொருத்தமான உத்தியோகத்தரை நியமித்தல் (அறிவித்தல் கடிதம் இணைப்பு) முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் பதவிக்கு பொருத்தமான உத்தியோகத்தரை நியமித்தல் (அறிவித்தல் கடிதம் இணைப்பு) Reviewed by Irumbu Thirai News on October 08, 2022 Rating: 5

உயர்தரப் பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் ஒத்திவைப்பு!

October 07, 2022

இந்த வருடத்திற்குரிய (2022) தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் உயர்தரப் பரீட்சை ஆகியவை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 

அதன்படி, புலமைப்பரிசில் பரீட்சை டிசம்பர் 18 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என்பதோடு உயர்தரப் பரீட்சை 2023 ஜனவரி 23 தொடக்கம் பெப்ரவரி 17 வரை நடைபெறும் என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.
உயர்தரப் பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் ஒத்திவைப்பு! உயர்தரப் பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் ஒத்திவைப்பு! Reviewed by Irumbu Thirai News on October 07, 2022 Rating: 5

Green Card Application - 2024 / அமெரிக்க நிரந்தர குடியுரிமை வழங்கும் கிரீன் கார்ட் விண்ணப்பம் - 2024

October 06, 2022


ஒவ்வொரு வருடமும், ஐ. அமெரிக்க பன்முகத்தன்மை விசா திட்டம் மூலம் 50,000 க்கும் மேற்பட்டோர் தெரிவுசெய்யப்பட்டு அவர்களுக்கு நிரந்தர வதிவிடங்களை அமெரிக்க அரசாங்கம் வழங்கி வருகின்றது. 

அந்த வகையில் 2024 ஆம் ஆண்டிற்கான விசா திட்டத்தின் கீழ் நேற்று முதல் (05) விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. 

குறித்த விசாவுக்காக Online மூலமாகவே விண்ணப்பிக்க முடியும் எனவும் எவ்வித பத்திரங்களையும் அனுமதிக்க மாட்டோம் என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை மேலும் தெரிவித்துள்ளது. 

இந்த Green Card ற்கான விண்ணப்பங்கள் இணைய தளத்தின் ஊடாக நேற்று (5) இரவு 09.30 மணி முதல் எதிர்வரும் நவம்பர் 08 ஆம் திகதி இரவு 10.30 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.

Click the link below for Online Application:


Green Card Application - 2024 / அமெரிக்க நிரந்தர குடியுரிமை வழங்கும் கிரீன் கார்ட் விண்ணப்பம் - 2024 Green Card Application - 2024 / அமெரிக்க நிரந்தர குடியுரிமை வழங்கும் கிரீன் கார்ட் விண்ணப்பம் - 2024 Reviewed by Irumbu Thirai News on October 06, 2022 Rating: 5
Powered by Blogger.