விரைவில் டெப் ஐப் பெற இருப்போர் இவர்கள்தான்..


உயர்தரத்தில் கல்வி கற்றும் சகல மாணவர்களுக்கும் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் டெப் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். தேசிய பாடசாலைகளில் 
உயர் தரத்தில் கற்கும் மாணவர்களுக்கும் கற்பிக்கும் ஆசிரியர்களுக்குமே முதற் கட்டமாக இது வழங்கப்படவிருக்கிறது. 
நேற்றைய தினம் கல்வி அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இந்த திட்டத்திற்கு அமைவாக ஒரு இலட்சம் 
டெப்கள் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் இரண்டாம் கட்டமாக ஏனைய பாடசாலைகளில் உயர்தரம் கற்கும் மாணவர்களுக்கும் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் டெப் வழங்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். 
இந்த நடைமுறையானது நாட்டில் இலவசக் கல்வி ஏற்படுத்தப்பட்ட பின்னர் அறிமுகப்படுத்தப்படும் யுகமாற்றம் என்றும் கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
(அ.த.தி)
விரைவில் டெப் ஐப் பெற இருப்போர் இவர்கள்தான்.. விரைவில் டெப் ஐப் பெற இருப்போர் இவர்கள்தான்.. Reviewed by irumbuthirai on September 25, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.