விரைவில் போக்குவரத்துக்கான ஸ்மார்ட் அட்டை...



பொது போக்குவரத்தின் போது பயணசீட்டுக்காக பணத்தை செலுத்துவதற்கு ஸ்மார்ட் அட்டையை பயன்படுத்தும் முறை எதிர்வரும் ஜூலை இறுதி முதல் பாவனைக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாட்டை போக்குவரத்து அமைச்சு மேற்கொண்டுள்ளது.
பயணச்சீட்டுக்கான பணத்தை பயன்படுத்தும் பொழுது அதில் கொரோனா வைரஸ் பரவக்கூடிய அபாயம் இருப்பதனால் இந்த முறைமை அறிமுகப்படுத்தப்படவிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த முற்கொடுப்பனவு ஸ்மார்ட் அட்டையை விரைவில் அறிமுகப்படுத்துவதற்கான ஏற்பாட்டைச் செய்யும்படி போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர ஆலோசனை வழங்கியுள்ளார்.
ரயில் மற்றும் அரச, தனியார் பேருந்துகளிலும் இந்த முறை அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.
இதேவேளை தனியார் பேருந்து சாரதி மற்றும் நடத்துனர்களின் சம்பளத்துக்கு மேலதிகமாக கொடுப்பணவொன்றை வழங்கும் வகையில் பஸ் உரிமையாளர்களோடு பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் ஆணைக்குழுவுக்கு அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.


விரைவில் போக்குவரத்துக்கான ஸ்மார்ட் அட்டை... விரைவில் போக்குவரத்துக்கான ஸ்மார்ட் அட்டை... Reviewed by irumbuthirai on June 09, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.