மீண்டும் கண்டுபிடிக்கப்பட்ட கடத்தல்கார பூனை!



வெலிக்கடை சிறையில் இருந்து தப்பிய போதைப்பொருள் கடத்தல்கார பூனை சிறைச்சாலை சுற்று வட்டாரத்திலேயே நடமாடித் திரிவதை கண்டறிந்துள்ளதாக சிறைச்சாலை நிர்வாக உத்தியோகத்தர் சந்தன ஏக்கநாயக்க உறுதிப்படுத்தியுள்ளார். 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த பூனை சுமார் 2 கிராம் ஹெரோயின் மற்றும் இரண்டு சிம் அட்டைகள் மற்றும் ஒரு மெமரி கார்ட் என்பன கழுத்தில் கட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 
பின்னர் இந்த பூனை போலீசுக்கு கையளிக்கப்படும் வரை சிறைச்சாலையில் உள்ள அறை ஒன்றில் அடைத்து வைக்கப்பட்ட நிலையிலேயே  அந்த அறையிலிருந்து நேற்றுமுன்தினம் தப்பிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

மீண்டும் கண்டுபிடிக்கப்பட்ட கடத்தல்கார பூனை! மீண்டும் கண்டுபிடிக்கப்பட்ட கடத்தல்கார பூனை! Reviewed by irumbuthirai on August 04, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.