அரபுக் கல்லூரிகளை திறக்க அனுமதிக்கப்பட்டது உண்மையா?


அரபுக் கல்லூரிகள் திறப்பது தொடர்பாக அரபுக் கல்லூரி பிரதிநிதிகளுடன் முஸ்லிம் சமயப் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நேற்று (21. 11.2020) இரவு 8.00 மணிக்கு நடாத்திய (zoom Meeting) கலந்துரையாடலில் பின்வருமாறு முடிவு எடுக்கப்பட்டது. 
அதாவது அரசாங்கப் பாடசாலைகள் ஆரம்பித்ததன் பின்னர் நிலைமைகளை ஓரிரு வாரங்களுக்கு அவதானித்த பின்னர் மத்ரசாக்களை திறப்பது தொடர்பில் முடிவு எடுக்கப்படும் என்றே தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
எனவே, எந்தவொரு அரபுக் கல்லூரியும் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்பதை கருத்தில் கொள்ளவும் என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் ஏ.பி.எம். அஷ்ரப் தெரிவித்துள்ளார்.
அரபுக் கல்லூரிகளை திறக்க அனுமதிக்கப்பட்டது உண்மையா? அரபுக் கல்லூரிகளை திறக்க அனுமதிக்கப்பட்டது உண்மையா? Reviewed by irumbuthirai on November 22, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.