உயிருடன் பிடிபட்ட அரியவகை சருகுமான்...


அரியவகை சந்தனம் நிறம் கொண்ட சருகுமான் ஒன்று புத்தளம் மாவட்டத்தின் நாத்தாண்டிய பிரதேச செயலகத்திற்குற்பட்ட தப்போவ பகுதியில் அப்பகுதி மக்களால் உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் வனஜீவராசிகள் பிராந்திய அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
குறித்த சருகுமானை பிடித்த பிரதேசவாசிகள் புத்தளம் வனஜீவராசிகள் பிராந்திய அலுவலக அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளனர். இதனையடுத்து அதிகாரிகள் குறித்த சருகுமானை மீட்டு வனஜீவராசிகள் பிராந்திய அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிருடன் பிடிபட்ட அரியவகை சருகுமான்... உயிருடன் பிடிபட்ட அரியவகை சருகுமான்... Reviewed by irumbuthirai on November 25, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.