கொரோனா பரிசோதனையில் அதிரடி திருப்புமுனை...


உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதற்கான பரிசோதனைகளுக்கும் பாரிய செலவுகளை பல்வேறு நாடுகள் செய்கின்றன. 
இந்த நிலையில், பிரான்சில் தொலைபேசி மூலம் அதிவேகமாக கொரோனா பரிசோதனையில் 90% துல்லியமான முடிவு அறியப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 
அதாவது, CORDIAL - 1 என்ற பெயரில் 300 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில் 90 சதவீதம் துல்லியமாக முடிவுகள் அறியப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. 
சளி மாதிரியை கண்டறியும் சிறிய கருவியை 
தொலைபேசியில் பொருத்தினால், அதன்மூலம் 10 நிமிடங்களில் முடிவுகளை அறியலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். அடுத்தகட்டமாக 1000 பேருக்கு பரிசோதனை செய்ய ஆராய்ச்சியாளர்கள் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா பரிசோதனையில் அதிரடி திருப்புமுனை... கொரோனா பரிசோதனையில் அதிரடி திருப்புமுனை... Reviewed by irumbuthirai on February 24, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.