உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் அரங்கத்துக்கு பெயர் மாற்றம்...


உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் அரங்கத்துக்கு பிரதமா் நரேந்திர மோடியின் பெயா் சூட்டப்பட்டுள்ளது. இந்த அரங்கத்தைக் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் கடந்த புதன்கிழமை திறந்து வைத்தாா். 
நாட்டு மக்களின் வலிமையையும் நாட்டின் திறமையையும் இந்த கிரிக்கட் அரங்கம் பறைசாற்றுகிறது. கிரிக்கெட் விளையாட்டின் மையமாக 
இந்தியா அறியப்படுகிறது. கிரிக்கெட் விளையாட்டில் இந்தியா உயா்ந்தநிலையை அடைந்ததைப் போல மற்ற விளையாட்டுகளிலும் முன்னணி பெறும். மற்ற துறைகளிலும் இந்தியா வளா்ச்சி காணும் என்று குடியரசுத் தலைவர் இந்நிகழ்வின் போது தெரிவித்தார். 
இந்த அரங்கத்தில் ஒரே நேரத்தில் 1.32 லட்சம் போ் அமா்ந்து கிரிக்கெட் போட்டியைக் காண முடியும். 
இந்த அரங்கம் சா்தாா் படேல் அரங்கம் என்ற பெயரில்தான் முன்னர் இருந்தது. மோடி குஜராத்தின் முதல்வராக இருந்தபோது, அந்த அரங்கத்தைப் புதுப்பித்து, உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் அரங்கமாகப் புனரமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் அரங்கத்துக்கு பெயர் மாற்றம்... உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் அரங்கத்துக்கு பெயர் மாற்றம்... Reviewed by irumbuthirai on February 27, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.