பாக்குநீரிணையைக் கடந்து சாதனை படைத்த விமானப்படை வீரருக்கு கிடைத்த கௌரவம்...


இலங்கை விமானப்படை நீச்சல் வீரரான ரொஷான் அபேசுந்தர, கடந்த ஏப்ரல் 11ஆம் திகதி, பாக்குநீரிணையை நீந்திக் கடந்து புதிய சாதனையை நிலைநாட்டியிருந்தார். 
தலைமன்னாரிலிருந்து இந்தியாவின் தனுஷ்கோடி வரை நீந்தி மீண்டும் தலைமன்னாரை வந்தடைந்தார். 
 28 மணித்தியாலங்கள், 19 நிமிடங்கள், 43 செக்கன்களை 
இதற்காக எடுத்துக் கொண்டதன் மூலம், புதிய ஆசிய சாதனையையும் இவர் நிலைநாட்டினார். 
எனவே இந்த சாதனையை பாராட்டும் வகையில், இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரணவினால், சிரேஷ்ட விமானப்படை வீரரான ரொஷான் அபேசுந்தர கோப்ரலாக தரமுயர்த்தப்பட்டுள்ளார். 
 இதுதொடர்பான இந்நிகழ்வு இன்றைய தினம் (15) இலங்கை விமானப்படைத் தலைமையகத்தில் இடம்பெற்றது.
பாக்குநீரிணையைக் கடந்து சாதனை படைத்த விமானப்படை வீரருக்கு கிடைத்த கௌரவம்... பாக்குநீரிணையைக் கடந்து சாதனை படைத்த விமானப்படை வீரருக்கு கிடைத்த கௌரவம்... Reviewed by irumbuthirai on April 15, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.