முதன்முறையாக ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு வழங்கப்படவுள்ள விசேட அடையாள அட்டை:

 

இலங்கையில் முதன் முறையாக ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு கல்வி அமைச்சின் ஊடாக உத்தியோகபூர்வ அடையாள அட்டைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். 
 
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கல்வி அமைச்சில் இன்று(6) இடம்பெற்ற உத்தியோகபூர்வ அடையாள அட்டை 
 
வழங்கும் நிகழ்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 
 
இதுவரையில் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சின் மூலமாக உத்தியோகபூர்வ அடையாள அட்டை வழங்கப்பட்டிருக்கவில்லை. தற்போது அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என அவர் மேலும் தெரிவித்தார்.
முதன்முறையாக ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு வழங்கப்படவுள்ள விசேட அடையாள அட்டை: முதன்முறையாக ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு வழங்கப்படவுள்ள விசேட அடையாள அட்டை: Reviewed by Irumbu Thirai News on October 06, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.