தரம் 10 - 13 வரையான தரங்களை மீள ஆரம்பித்தல் தொடர்பாக வெளியான சுற்றுநிருபம்!


நான்கு கட்டங்களாக பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் திட்டத்தின்கீழ் 3வது கட்ட ஆரம்பத்திற்கான அறிவிப்பும் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அதற்கான சுற்றறிக்கையும் வெளியாகியுள்ளது. 
 
அந்த வகையில் 10 ,11 , 12 மற்றும் 13 ஆம் தரங்களுக்கான கல்வி நடவடிக்கைகள் 

எதிர்வரும் 8 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
எனவே தரம் 10 தொடக்கம் 13 வரையிலான வகுப்புகளுக்குரிய கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குத் தேவையான கல்விசார் ஊழியர்கள் சேவைக்கு அழைக்கப்பட வேண்டும். 
 
மேலும் சகல கல்விசாரா ஊழியர்களும் சேவைக்கு அழைக்கப்பட வேண்டும். 
 
வகுப்பறை முகாமைத்துவ முறையின் கீழ் உரிய முறையைப் பயன்படுத்தி மாணவ-மாணவியர்கள் அழைக்கப்படுவதோடு (பகுதி பகுதியாக) இணையவழி கற்றல் முறையை பயன்படுத்தி, 

பாடசாலைக்கு சமூகமளிக்காத மேற்படி தரங்களை சேர்ந்த மாணவர் குழுக்களுக்கு குறித்த பாடப்பகுதி நிறைவு செய்யப்பட வேண்டும். இதற்கு தேவைப்படும் வசதிகளை பெற்றுக்கொள்வதற்காக கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை 09/2021 மற்றும் 09/2021 (1) என்பவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளபடி நிதி ஒதுக்கீடுகளை பயன்படுத்தலாம். 
 
கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் ஒரு வயதிற்கு குறைந்த பிள்ளைகள் உள்ள உத்தியோகத்தர்கள் சேவைக்கு சமூகமளிப்பது கட்டாயமில்லை என்பதுடன் வேறு நோய்த் தாக்கத்திற்குள்ளானவர்களை அத்தியாவசியமான நேரத்தில் மட்டும் சேவைக்கு அழைக்கலாம். எவ்வாறாயினும் இதனை உறுதிப்படுத்தும் ஆவணங்களுடன் வேண்டுகோள் கடிதத்தையும் வலயக்கல்விப் பணிப்பாளரிடம் சமர்ப்பித்து அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும். 
 
பாடசாலை ஆரம்பிக்கப்படுகின்ற ஆரம்ப காலங்களில் பாடசாலை சீருடை கட்டாயமாக்கப்படவில்லை. அதனடிப்படையில் பொருத்தமான 

உடையில் பாடசாலைக்கு வருவதற்கு மாணவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்குமாறும் கல்வி அமைச்சின் சுற்று நிரூபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 
தரம் 10 - 13 வரையான தரங்களை மீள ஆரம்பித்தல் தொடர்பாக வெளியான சுற்றுநிருபம்! தரம் 10 - 13 வரையான தரங்களை மீள ஆரம்பித்தல் தொடர்பாக வெளியான சுற்றுநிருபம்! Reviewed by Irumbu Thirai News on November 03, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.