சப்ரகமுவ, மத்திய, ஊவா மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமை(5) விசேட விடுமுறை வழங்க அந்த மாகாண ஆளுநர்களால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டே இந்த விசேட விடுமுறை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் நாளை மறுதினம் வழங்கப்படும் இந்த விசேட விடுமுறைக்காக
பிறிதொரு தினத்தில் பாடசாலை நடத்தப்படும் என மாகாண கல்வித் திணைக்களங்கள் தெரிவித்துள்ளன.
நான்கு கட்டங்களாக பாடசாலைகளை ஆரம்பிக்கும் திட்டத்தின்கீழ் 200 மாணவர்களுக்கு குறைந்த ஆரம்ப பிரிவு முதல் கட்டத்திலும் 200 மாணவர்களுக்கு கூடிய ஆரம்ப பிரிவு இரண்டாம் கட்டத்திலும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் தரம் 10 தொடக்கம் 13 வரையான வகுப்புக்களை ஆரம்பிக்கும் மூன்றாம் கட்டம் எதிர்வரும் 8ம் திகதி என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தரம் 10 - 13 வரையான வகுப்புகளை ஆரம்பிப்பது தொடர்பான சுற்றுநிருபம் கல்வி அமைச்சால் வெளியிடப்பட்டுள்ளது. முழுவிபரம்..
வெள்ளிக்கிழமை விசேட விடுமுறை வழங்கப்படும் பாடசாலைகள்!
Reviewed by Irumbu Thirai News
on
November 03, 2021
Rating:
No comments: