பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் தொடர்பான முழுமையான வழிகாட்டல் - 2021


கொவிட் - 19 தொற்றுப் பரவல் நிலைமையின் கீழ் சுகாதார பாதுகாப்புடன் பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் தொடர்பான முழுமையான வழிகாட்டல் கையேட்டை கல்வியமைச்சு வெளியிட்டுள்ளது.

மாணவர்கள், ஆசிரியர்கள், உளவள ஆலோசனை வழங்கும் ஆசிரியர், அதிபர், பெற்றோர், போக்குவரத்து சேவை வழங்குவோர் போன்ற சகல தரப்பினருக்குமான வழிகாட்டல் முழுமையாகத் தரப்பட்டுள்ளது.

 

பாடசாலை ஆரம்பம் -: 
2021 ஒக்டோபர் 21ஆந் திகதியிலிருந்து 4 கட்டங்களாக ஆரம்பிக்கப்படுகிறது.
 
கட்டம் 01: மொத்த மாணவர் தொகை 200க்கு குறைவான பாடசாலைகளின் ஆரம்ப பிரிவுகள். 
 
கட்டம் 02: மொத்த மாணவர் தொகை 200க்கு அதிகமான பாடசாலைகளின் ஆரம்ப பிரிவுகள் மற்றும் மாணவர் தொகை 100க்கு குறைவான பாடசாலைகளின் சகல வகுப்புகள்.
 
கட்டம் 03: சகல பாடசாலைகளினதும் தரம் 10,11,12,13 மற்றும் மாணவர் தொகை 200 க்கு குறைந்த பாடசாலைகளின் சகல வகுப்புகள்.
 
கட்டம் 04: ஏனைய தரங்களை ஆரம்பித்தல்.
 
 
கற்றல் கற்பித்தல் செயற்பாடு மற்றும் வகுப்பறை முகாமைத்துவம்: 
கற்றல் கற்பித்தல் செயன்முறை மற்றும் வகுப்பறை முகாமைத்துவத்தின்போது கவனத்திற் கொள்ள வேண்டிய முக்கிய விடயமாக அமைவது மாணவர்களிடையே சமூக இடைவெளியைப் பேணுவது மற்றும் முகக்கவசம் அணிவது உள்ளிட்ட சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளைக் கடைப்பிடித்தலாகும். 
 

 மட்டுப்படுத்தப்பட்ட மாணவர் தொகுதியினரோடு கூடிய வகுப்பை நடாத்துவதற்கு ஏற்றவாறு நேரசூசியை தயாரித்துக்கொள்ளல். 
 
 இடைவெளியோடு கூடியதாக மாணவர்களை வைத்துக்கொள்வதற்கு ஏதுவாக பாடசாலையிலுள்ள அனைத்து வகுப்பறைகளையும் கற்பித்தல் நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தல். 
 
 மேலும், பாடசாலையில் பொது இடங்களைத் தெரிவு செய்து (பிரதான மண்டபம்/மாநாட்டு மண்டபம்) பரிந்துரைக்கப்பட்ட இடைவெளி மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றி தயாரிக்கப்பட்ட நேரசூசியின் அடிப்படையில் அதிகமான மாணவர் எண்ணிக்கைக்கு ஒரே தடவையில் கற்பித்தல் நடவடிக்கைகளை ஆரம்பித்தல். 
 
 வகுப்பறைகளை எப்போதும் நன்கு காற்றோட்டம் பெறும் வகையில் அமைத்துக் கொள்ளல் மற்றும் திறந்தவெளிகளில் கற்பிப்பதற்கு ஆசிரியர்களை ஈடுபடுத்தல்.
 
 மாணவர்கள் நேருக்கு நேர் முகம் நோக்கி இல்லாதவாறு வகுப்பறையில் அமரச் செய்வதற்கான முறையைத் திட்டமிடுதல்.  

பாடசாலை சிற்றுண்டிச்சாலை: 
மீள் அறிவித்தல்வரை பாடசாலைச் சிற்றுண்டிச்சாலைகளைத் மூடி வைத்திருத்தல். 
 
 
இடைவேளை: 
 பாடசாலை இடைவேளையானது, அனைத்து மாணவர்களுக்கும் ஒரே நேரத்தில் கிடைக்காத வகையில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு அமைவாக அதிபரின் விருப்பின் அடிப்படையில் மற்றும் பாடசாலைக்குப் பொருந்தும் வகையில் தயார் செய்து கொள்ளமுடியும். 
 
 உணவு உண்ணும்போது முகக் கவசத்தை கழற்றுவதால் உணவு இடைவேளைக்கான நேரத்தைக் குறைப்பதற்கு பொருத்தமான ஏற்பாடுகளை செய்தல். 
 
 எப்பொழுதும் வீட்டிலிருந்து கொண்டுவரப்படும் உணவை உண்பதற்கு ஊக்குவிப்பதோடு, பாடசாலைக்கு வரும் வழியில் உணவு வாங்குவதைத் தவிர்க்கும்படி அறிவுறுத்தல் வழங்கி, அதுதொடர்பாக மேற்பார்வை செய்யப்படல் வேண்டும். 
 
 பாடசாலை இடைவேளையின்போது, மாணவர்களுக்கிடையே இடைவெளியைப் பேணுதல், முகக் கவசம் அணிதல் மற்றும் ஒருவரையொருவர் ஸ்பரிசம் செய்யும் விதத்திலான ஆபத்தான விளையாட்டுக்களில் ஈடுபடுவதை தவிர்த்தல் வேண்டும். 

இணைப்பாடவிதான செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துதல்: 
 ஒருவரை ஒருவர் தொடாத விதமாக மற்றும் பொருட்களை பரிமாற்றம் செய்யாத தூரத்தைப் பேணும் விதத்தில் விளையாட்டு மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துதல். இவ்வாறான செயற்பாடுகள் மாணவர்களின் உடல் மற்றும் உள அபிவிருத்திக்கு உறுதுணையாக இருக்கும். 
 
 ஏனைய பாடசாலை விளையாட்டுகள் மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளை மேற்கொள்வது குறித்து எதிர்காலத்தில் அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
 
 
போக்குவரத்து செய்யவேண்டிய முறை: 
 நடந்து செல்லும் தூரம், துவிச்சக்கர வண்டியில் செல்லும் தூரம் அல்லது பெற்றோருடன் மோட்டார் சைக்கிலில் செல்லும் தூரத்தில் இருப்பின் நடந்து/ துவிச்சக்கர வண்டி மோட்டார் சைக்கிலில் பாடசாலைக்குச் செல்வது பாதுகாப்பானது. 
 
 தனிப்பட்ட வாகனத்தை பயன்படுத்துவதாயின் வாகன நெரிசல் ஏற்படாதவாறு பயன்படுத்துதல். 
 
 பொதுப் போக்குவரத்து அல்லது பாடசாலை பேரூந்து/ வேன் போக்குவரத்து சேவையினைப் பயன்படுத்துவதாயின், ஆசன எண்ணிக்கையில் மட்டும் பயணிக்கவும். 
 
 பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும்போது, வாகனத்திற்குள் ஏறும்போது மற்றும் இறங்கிய பின்னர் கிருமி நீக்கித் திரவங்களைப் பயன்படுத்தி கைகளை சுத்தம் செய்துகொள்ளல். வாய், மூக்கு மற்றும் கண்களைத் தொடுவதைத் தவிர்த்தல். 
 
 வாகனத்தில் குளிரூட்டியை (Air Condition) பயன்படுத்தாது, ஜன்னல்களைத் திறந்து காற்றோட்டமாக வைத்திருங்கள். 
 
 வாகனத்திற்குள் முகக்கவசத்தைக் நீக்குதல் மற்றும் உணவு வகைகள் பரிமாற்றம் செய்வதைத் தவிர்க்கவும். 
 
 வாகனத்தில் ஏறிய பின்னர் உங்களுக்கு உரிய ஆசனத்தில் அமர்வதோடு, வாகனத்திற்குள் தேவையற்ற விதத்தில் நடமாடுவதைத் தவிர்த்தல். 
 
 
 
ஆசிரியர்களுக்கான அறிவுறுத்தல்கள்:
 பாடசாலை ஆரம்பிக்கப்படும் முதல் நாளில் மாணவர்களின் மனநிலையை மேம்படுத்தவும், கொவிட் 19 இன் சவால்களுக்கு வெற்றிகரமாக முகம் கொடுக்கும் வகையிலும் ஒரு அன்பான வரவேற்பினை அளித்தல். 
 
 மாணவர்கள் மீது விதிக்கப்பட்டுள்ள சுகாதாரப் பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் யாவும் சகல ஆசிரியர்களுக்கும் ஏனைய பணியாளர்களுக்கும் செல்லுபடியாகும் அதேவேளை, கைகளைக் கழுவுதல், உடல் வெப்பநிலையைப் பரிசோதித்தல், முகக் கவசம் அணிதல் ஆகியன அவர்களுக்கும் கட்டாயமானதாகும். 
 
 அதிபரின் அறிவுறுத்தலின் பேரில், பாடசாலை சுகாதார மேம்பாட்டு வேலைத்திட்டத்திற்குப் பொறுப்பான ஆசிரியரினால் நடைமுறைப்படுத்தப்படும் மேற்பார்வை வேலைத்திட்டத்திற்கு சகல ஆசிரியர்களும் முனைப்புடன் பங்குபற்றிப் பொறுப்பேற்க வேண்டும். 
 
 மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் மற்றும் உளநல ஆரோக்கியம் தொடர்பாகவும் கவனம் செலுத்தி, சமூக இடைவெளியைப் பேணி உளநல ஆரோக்கியத்தை மேம்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுப்பது ஆசிரியர்களின் பொறுப்பாகும். 
 
 பாடசாலைகயில் இருக்கும் காலப்பகுதியில் முகக்கவசம் அணிந்திருப்பதுடன், மாணவர்களின் முகக் கவசம் தொடர்பாக கூடிய கவனம் செலுத்துதல். 
 
 விசேட தேவையுடைய மாணவர்களின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துதல். 
 
 கிருமிநீக்கி கரைசல்களை பயன்படுத்தும்போது அவற்றை பாதுகாப்பாக கையாளுவது பற்றி மாணவர்களை தெளிவூட்டுதல். 
 
 தொலைக்கல்வியோடு ஒப்படும்போது நேரடி பாடசாலைக் கல்வியூடாக நல்ல பெறுபெறுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதை பெற்றோருக்கு தெளிவூட்டுவது ஆசிரியர்களின் பொறுப்பாகும். 
 
 
உளவள ஆலோசனை வழங்கும் ஆசிரியர்க்கான அறிவுறுத்தல்கள்:
 நீண்ட காலம் வீட்டிலிருந்து மன அழுத்தத்துக்குள்ளாகி வரும் மாணவர்களை கனிவுடன் வரவேற்பதற்காக பாடசாலை அதிபர் மற்றும் சக ஆசிரியர்களுடன் இணைந்து வேலைத்திட்டமொன்றை தயாரித்தல் 
 
 பாடசாலை மாணவர்களின் உளவியல் சமூக நன்னடத்தையை அபிவிருத்தி செய்வது தொடர்பாக கல்வி அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ள உளவியல் சமூக செயற்பாடுள் கையேட்டுக்கு அமைய நிகழ்ச்சித்திட்டங்களை செயற்படுத்தல் 
 
 அந்நிகழ்ச்சித்திட்டத்துக்கு சமாந்திரமாக பாடசாலை மட்டத்தில் மாணவர்களின் உளவியல் சமூக அபிவிருத்திக்கான நிலைபேரான திட்டமொன்றை செய்தல். 
 
 பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் பாடசாலைக்கு வரும் மாணவர்களை இனங்கண்டு தேவையான தலையீடுகளை செய்தல். 
 
 ஆபத்தான சுபாவம்கொண்ட பிள்ளைகளை இனங்கண்டு அவர்களை நேர்வழிபடுத்துவதற்குத் ஆலோசனை ரீதியான தலையீட்டினை செய்வதுடன் தேவையானபோது நிபுணத்துவ உதவியைப் பெற்றுக்கொள்ளல். 
 
 போதைப்பொருள் பாவனைக்கு பழக்கப்பட்டிருக்கும் மாணவர்களை இனங்காண்பதற்கு பொருத்தமான திட்டமொன்றை தயாரித்தல். அவர்களை அந்நிலைமையிலிருந்து மீட்டெடுப்பதற்கு தேவையான ஆலோசனை வழங்கல். மேலும் தேவையானபோது நிபுணத்துவ உதவியைப் பெற்றுக்கொள்ளல் 
 
 மாணவர்களின் பிரச்சினைகளை உளவில் விஞ்ஞான முறைமை ரீதியில் அணுகுவது தொடர்பாக சக ஆசிரியர்களுடன் கலந்துரையாடுவதன் மூலமாக அது தொடர்பில் அவர்களது கவனத்தை திருப்புதல் 
 
 பாடசாலையில் ஆலோசனை பிரிவை திட்டமிட்ட அடிப்படையில் நடாத்திச் செல்லல் மற்றும் பிரச்சினையுள்ள மாணவர்கள் தன்னை நோக்கி வரும்விதமான திட்டமொன்றை தயாரித்துக்கொள்ளல்.
 
 
மாணவர்களுக்கான அறிவுறுத்தல்கள்: 
 பாடசாலைக்குள் பிரவேசிக்கும் போது, சவர்க்காரம் இட்டுக் கைகளைக் கழுவுதல் மற்றும் பாதணிகளைக் கிருமித் தொற்றுநீக்கத்திற்கு உட்படுத்துதல்.
 
 சமூக இடைவெளியைப் பேணுதல். 
 
 புத்தகங்கள், பேனைகள் போன்றவற்றைப் பகிர்வதைத் தவிர்த்தல். 
 
 பாடசாலையில் இருக்கும்போது, முகக்கவசம் கட்டாயம் அணிதல் வேண்டும். மேலும் மேலதிக முகக்கவசம் ஒன்றை புத்தகப்பையில் வைத்திருத்தல். 
 
 உணவு அருந்தும் போது அல்லது வேறு எந்தச் சந்தர்ப்பத்திலும் தற்காலிகமாக முகக் கவசத்தைக் அகற்றி சுத்தமான பையொன்றில் வைத்தல் அல்லது அணிந்திருக்கும் சீருடையில் வைத்திருத்தல். 
 
 முகக்கவசங்களை ஒருபோதும் பொது இடங்களில் வைக்கக்கூடாது. 
 
 உணவு அருந்தும் போது அல்லது வேறு எந்தச் சந்தர்ப்பத்திலும் தற்காலிகமாக முகக் கவசத்தைக் அகற்றிய பின்னர் மீண்டும் அணிய முன்னர் கைகளை நன்கு சுத்தமாக்கிக் கொள்ளல். மேலும் பிறரின் முகக்கவசங்களை ஒருபோதும் அணியக்கூடாது. 
 
 வகுப்பறையிலிருந்து சென்று மீண்டும் வரும்போது அல்லது மேற்பரப்பு ஒன்றை தொட்ட பின்னர் கைகளை நன்கு கழுவிக்கொள்ளல் வேண்டும். 
 
 உணவு மற்றும் தண்ணீர் போத்தலை பகிரக்கூடாது 
 
 பாடசாலையினுள் அல்லது பாடசாலைக்கு வெளியே ஒன்றுகூடுவதை தவிர்த்தல் 
 
 பாடசாலை விட்டவுடன் உடனடியாக வீடு நோக்கி விரைதல் 
 
 பாடசாலைக்கு வரும்போது மற்றும் வீடுகளுக்குச் செல்லும்போது பயன்படுத்தும் தனிப்பட்ட அல்லது பொதுப் போக்குவரத்துச் சேவைகளில் சுகாதார அறிவுறுத்தல்களைக் கடைப்பிடித்தல். 
 
 தான் பயன்படுத்தும் போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்த தகவல்களை வகுப்பாசிரியருக்கு வழங்குதல் 
 
 தங்களுக்கு ஏதேனும் நோய், காய்ச்சல், சளி போன்ற நோய் அறிகுறிகள் காணப்படின், அந்நிலை குணமாகும் வரை பாடசாலைக்கு வருவதைத் தவிர்த்தல். 
 
 தங்கள் வீட்டில் யாரேனும் தனிமைப்படுத்தப்பட்டிருந்தால் அல்லது கொவிட் 19 நோயாளியுடன் தொடர்புபட்டிருந்தால் சுகாதார அறிவுறுத்தல்களின் படி மீள அறிவிப்பு வரும்வரை பாடசாலைக்கு வராதிருத்தல். 
 
 பாடசாலையில் அல்லது அதற்கு வெளியில் தேவையற்றவிதத்தில் எப்பொருளையும் தொடுவதைத் தவிர்த்தல். 
 
 
அதிபருக்கான அறிவுறுத்தல்கள்:
 பாடசாலை அதிபரினால் பாடசாலை முன்னாயத்த செயற்பாடுகள் ஆலோசனைக் கோவையின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்டு அது பற்றி சம்பவத்திரட்டில் குறிப்பிடப்படல். 
 
 கொவிட் 19 பரவலைத் தவிர்ப்பதற்காக அதிபரின் தலைமையில் பாடசாலைச் சுகாதார மேம்பாட்டுக் குழுவை முனைப்பாக முன்னெடுத்தல் மற்றும் சுகாதார மேம்பாட்டு வேலைத்திட்டத்துக்குப் பொறுப்பான பிரதி அதிபர்/ ஆசிரியரொருவரின் தலைமையில் தொடர்ச்சியாகக் கண்காணிப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல். 
 
 கொவிட் 19 பரவலைத் தவிர்க்கும் வேலைத்திட்டத்துக்காக கல்வி அமைச்சின் தலையீட்டில் பெற்றுக்கொடுக்கப்பட்ட நிதி, பொருட்கள் அல்லது உபகரணங்கள் தொடர்பாக மற்றும் பாடசாலையை பாதுகப்பாக ஆரம்பித்தல் தொடர்பில் பெற்றுக் கொடுக்கப்பட்ட அறிவுறுத்தல்கள் தொடர்பாக உரியவாறு பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்களை அறியச் செய்வதினூடாக அவர்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தல். 
 
 பாடசாலையை ஆரம்பிக்க முன்னர் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிசெய்து கொள்வதற்காக மேற்கொண்ட ஆவணங்களைப் பூர்த்திசெய்து அதிபரின் கையொப்பத்துடன் கோட்டக் கல்விப் பணிப்பாளருக்கு அனுப்பி வைப்பதுடன் அதன் பிரதிகளைப் பாடசாலையில் வைத்திருத்தல்.  
 
 கொவிட் 19 நோய்யறிகுறி காணப்படும் பிள்ளையொன்று இனங்காணப்படும் சந்தர்ப்பத்தில் அவரை நோயாளர் அறைக்கு அனுப்பி உடனடியாக பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியூடாக வலய மட்டத்தில் இணைக்கப்பட்டிருக்கும் பிள்ளை நோய்/ சரும நோய் தொடர்பான வைத்திய நிபுணரிடத்தில் காண்பித்தல் வேண்டும்.  பிள்ளைக்கு அவசர சிகிச்சை தேவை என உணரும் சந்தர்ப்பத்தில் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதுடன் பிரதேசத்தில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரிக்கு தெரியப்படுத்தல் வேண்டும். 
 
 பாடசாலையை ஆரம்பித்த பின்னர் சுகாதாரப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மேற்கொண்ட மதிப்பீட்டு ஆவணங்களை அன்றாடம் பூர்த்தி செய்யும் பணியை ஆசிரியர்களிடம் ஒப்படைத்து வாரத்துக்கு ஒரு தடவை அதிபரின் கையொப்பத்துடன் கோட்டக் கல்விப் பணிப்பாளருக்கு வழங்குதலும் பிரதிகளைப் பாடசாலையில் வைத்துக்கொள்ளலும்.  
 
 மாணவர்களை சுகாதாரப் பாதுகாப்புடன் பாடசாலைக்கு அனுப்பும்போது கடைப்பிடிக்க வேண்டிய விடயங்கள் தொடர்பாகப் பெற்றோர்களை தெளிவூட்டுவதற்கு திட்டமொன்றை உருவாக்குதல் 
 
 இருமல், தடிமன் அல்லது காய்ச்சல் போன்ற நோயறிகுறிகள் இருக்குமாயின் அல்லது வீட்டில் வேறொரு உறுப்பினர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருப்பின் அல்லது குடும்ப உறுப்பினரின் அல்லது பிள்ளையின் பி.சீ.ஆர் பரிசோதனை/ துரித பிறபொருளெதிரிப் பரிசோதனை (Rapid Antigen Test) மேற்கொள்ளப்பட்டிருப்பின் அந்த அறிக்கைக்கு அமைய சுகாதார அறிவுறுத்தல் பெற்றுக் கொள்ளப்படும் வரை பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாமெனப் பெற்றோர்களை அறிவுறுத்தல் 
 
 சுகயீன நிலை காரணமாக வீட்டில் தங்கியிருக்கும் மாணவர்களுக்காக அன்றாட கல்வி நடவடிக்கைகள் தவறவிடப்படாதவாறு முறைமையொன்றைத் தயார் செய்வதினூடாக பிள்ளையை வீட்டிலேயே தங்கியிருக்கச் செய்யப் பெற்றோர்களைத் தூண்டுதல் 
 
 பாடசாலைக்கு மாணவர்கள் வரும் வண்டிகள் மற்றும் வேன்கள் தொடர்பாக தகவல்களைச் சேகரித்துக்கொள்வதற்கான திட்டமொன்றைத் தயார்செய்தல் 
 
 அடிக்கடி பயன்படுத்தும் பொருட்களைத் தொற்றுநீக்கம் செய்தல், கைப்பிடிகள், கதவுத் திருகிகள் என்பவற்றை அடிக்கடி தொற்றுநீக்கம் செய்வதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல்.
 
 
 
பெற்றோர்களுக்கான அறிவுறுத்தல்கள்: 
 இருமல், சளி அல்லது காய்ச்சல் போன்ற நோய் அறிகுறிகள் இருப்பின் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பாதிருத்தல். 
 
 வீட்டில் வேறு யாரேனும் தனிமைப்படுத்தப்பட்டிருந்தால் தங்கள் பி;ள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பாதிருத்தல். 
 
 வீட்டிலுள்ள ஒருவர் அல்லது பிள்ளைக்கு பீ.சீ.ஆர் (PCR) பரிசோதனை/ துரித பிறபொருளெதிரி சோதனை (Rapid Antigen Test) செய்யப்பட்டிருந்தால் அவ் அறிக்கையின்படி சுகாதார அறிவுறுத்தல்கள் கிடைக்கப்பெறும் வரை பிள்ளையைப் பாடசாலைக்கு அனுப்பாதிருத்தல். 
 
 தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் இருந்து ஏனைய பிரதேசங்களில் உள்ள பாடசாலைக்குப் பிள்ளைகளை அனுப்பாதிருத்தல். 
 
 தங்கள் பிள்ளை பயன்படுத்தும் உபகரணங்கள் (பாடசாலைப் பை/ தண்ணீர்ப் போத்தல்/ சாப்பாட்டுப் பெட்டி/ புத்தகங்கள் போன்றன) சுத்தப்படுத்துதல் அல்லது வெயிலில் இட்டு உலர்த்துதல். 
 
 தினந்தோறும் பிள்ளையின் ஆடைகள் மற்றும் பாதணிகளைச் சுத்தம் செய்தல். 
 
 பாடசாலைக்குச் சென்று திரும்பியதும் பிள்ளையின் கைககளைக் கழுவுதல் மற்றும் பிள்ளையைச் சுத்தமாக இருக்கச் செய்தல். 
 
 பாடசாலை விட்டு வந்ததும் காலணிகளை வெளியே கழற்றிவிட்டு உள்ளே வருதல்  பாவித்த முகக் கவசங்களை எரித்தல் 
 
 வீட்டில் சமைத்த உணவுகளை மாத்திரம் பிள்ளைக்குக் கொடுப்பதோடு, எல்லாச் சந்தர்ப்பங்களிலும் பிள்ளை பயன்படுத்தும் பொருட்களை தனிப்பட்ட முறையில் பயன்படுத்துவதற்கு அறிவுறுத்தல்களை வழங்குதல். 
 
 பாடசாலை விட்டதும் பிள்ளையை வீட்டிற்கு வரும்படி அறிவுறுத்தல் வழங்குதல்/ அழைத்துக்கொண்டு வருதல். 
 
 பாடசாலைக்கு வரும்போது மற்றும் வீடுகளுக்குச் செல்லும்போது பயன்படுத்தும் தனிப்பட்ட அல்லது பொது போக்குவரத்துச் சேவைகளில் சுகாதார அறிவுறுத்தல்களைக் கடைப்பிடிப்பதற்கு அறிவுறுத்தல் வழங்குதல். 
 
 தங்கள் பிரதேசத்தில் சுகாதாரம் தொடர்பாக ஏதேனும் சிக்கல் இருந்தால் அது தொடர்பாக அதிபருக்கு அறிவிப்பதன் மூலம் பாடசாலைக்கு எற்படக்கூடிய பாதகமான விளைவுகளைக் குறைக்க உதவுதல். 
 
 
 
மாணவர்களுக்கான போக்குவரத்து சேவையை வழங்குபவர்களுக்கான அறிவுரைகள்: 
 இருவர் அமரும் ஆசனங்களில் எப்போதும் இருவரை மாத்திரம் அமரச்செய்தல் மேலும் ஆசனங்களின் எண்ணிக்கைக்கமைவாக மாத்திரம் மாணவர்களை அழைத்து வருதல். 
 
 பாடசாலை வாகனங்களில் மாணவர்கள் ஏறும் போதும் இறங்கும்போதும் கைகளை சுத்தப்படுத்திக் கொள்வதற்காக தொற்றுநீக்கி திரவங்களை வைத்தல். 
 
 முற்றிலும் குளிரூட்டப்பட்ட வாகனமாயின் மாணவர்களை அழைத்து வரும் போது குளிரூட்டியை நிறுத்தி யன்னல்களை திறந்து காற்றோட்டம் கிடைக்கப்பெறச் செய்தல். 
 
 மாணவர்கள் வாகனத்தினுள் முகக்கவசங்களை அகற்றல், உணவுகளை பரிமாறல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடாதிருக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளல். 
 
 தினமும் ஒரே மாணவர் குழுவினை அழைத்துவருதல். ஒரே பாடசாலை மாணவர்களை ஒரு வாகனத்தில் அழைத்துவருதல். 
 
 வாகனத்தில் தினமும் வருகை தரும் மாணவர்களின் தகவல்களைப் பேணிவருதல். 
 
 தினமும் வருகை தரும் மாணவர்களை பதிவு செய்யும் இடாப்பு ஒன்றை பேணுதல். 
 
 பாடசாலை மாணவர்கள் வரும் வாகனங்களில் வெளி ஆட்களை அழைத்துவராதிருத்தல். 
 
 காலையில் மாணவர்கள் வாகனத்தில் ஏறும் போது அவர்களுக்கு ஏதேனும் சுகவீன நிலைமை இருக்கின்றதா என கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ளல். 
 
 தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களிலிருக்கும் மாணவர்களை அழைத்துவராதிருத்தல். 
 
 காலையில் மாணவர்கள் வாகனத்திலிருந்து இறங்கிச் சென்றதன் பின்னர் வெளி ஆட்களை வாகனங்களில் ஏற்றாதிருத்தல். 
 
 வாகன சாரதி மற்றும் நடாத்துனர் எப்போதும் முகக்கவசங்களை அணிந்திருத்தல். 
 
 தினமும் காலையில் மாணவர்கள் வாகனத்தில் ஏறும் முன்னரும் மாலையில் ஏறும் முன்னரும் அடிக்கடி தொடுகைக்கு உட்படும் இடங்களை முறையாக சுத்தப்படுத்தல். 
 
 அவசர நிலைமைகளின் போது அழைப்பதற்கான தொலைபேசி இலக்கங்களை வாகனங்களில் காட்சிப்படுத்தல். 
 
 கோரோனா நோய் தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் பிரதேசங்களிலிருப்பவர்களை பணியில் அமர்த்தாதிருத்தல். 
 
 இயன்றவரையில் ஒரே சாரதி மற்றும் நடாத்துனரைக் கொண்டு சேவையை வழங்குதல். 
 
 சரியான தகவல்களை வழங்காத பணியாளர்களை வேலைக்கமர்த்தாதிருத்தல். 
 
 தினமும் பணியாளர்களை மாற்றாதிருத்தல். 
 
 சாரதி அல்லது நடாத்துனர் சுகயீனமுற்றிருப்பின் அவர்களை பணிக்கமர்த்தாதிருத்தல். 
 
 சாரதி, நடாத்துனர் காலையில் வாகனத்தில் ஏறும் முன்னர் அவர்களது உடல் வெப்பநிலையை பரீட்சிப்பதற்கான நடைமுறையை உருவாக்கல். 
 
 சாரதி மற்றும் நடாத்துனர் வெற்றிலை மெல்லுவதற்காக முகக்கவசங்களை அகற்றாதிருப்பதற்கான அறிவுரைகளை வழங்க நடவடிக்கை எடுத்தல். 
 
 முச்சக்கர வண்டிகளில் சமூக இடைவெளி பேணத்தக்க முறையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள எண்ணிக்கையிலான மாணவர்களை மாத்திரம் அழைத்து வருதல். 
 
 சேவையில் ஈடுபடும் பாடசாலை போக்குவரத்துச் சேவை சாரதிகள் மற்றும் நடாத்துனர்கள் பூரணமாக தடுப்பூசியை பெற்றிருத்தல் வேண்டும்.
 
 
பாடசாலை ஆரம்பித்ததன் பின்னர் சுகாதார பாதுகாப்பான முறையில் பாடசாலையை நடாத்துதல்:
 நீண்ட நாட்களுக்கு பின்னர் பாடசாலைக்கு வருகை தரும் மாணவர்களை இனிதாக வரவேற்பதுடன், அவர்களின் உளவியல் நிலைய உயர்த்துவதற்கு உளவியல் சுகாதார செயற்பாடுகளை முன்னெடுத்தல். 
 
 வீட்டில் இருந்த காலப்பகுதியில் நிகழ்நிலை கற்றல் தொடர்பாக மாணவர்களை வினவாதிருத்தல். இலகுவான மட்டத்திலிருந்து கற்றல் செயற்பாடுகளை ஆரம்பிக்குமாறு சகல ஆசிரியர்களையும் அறிவுறுத்தல். 
 
 எப்போதும் மாணவர்கள் மத்தியில் சாந்தமான மனநிலையைப் பேணுவதை உறுதி செய்வதற்காக உளவிழிப்புணர்வு அபிவிருத்தி செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தல். 
 
 பாடசாலைக்கு வரும்போதும், பாடசாலையில் இருக்கும்போதும் மற்றும் பாடசாலையிலிருந்து வெளிச்செல்லும் வழியில் முகக்கவசம் அணிவதைக் கட்டாயப்படுத்தல். 
 
 பாடசாலைக்குள் நுழையும் போது சகல மாணவர்களதும் உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்தல் மற்றும் தேவையான சந்தர்ப்பங்களில் வகுப்பறையில் உடல் வெப்பநிலையை மீண்டும் பரீட்சித்தல். 
 
 மாணவர்கள் பாடசாலையினுள் நுழையும்போது கைகளைக் கழுவுவதை கட்டாயப்படுத்தல் மற்றும் அச்செயற்பாடு சரியாக மேற்கொள்ளப்படுகின்றதா என தினமும் மேற்பார்வை செய்தல். 
 
 மாணவர்களுக்கிடையில் சமூக இடைவெளி பேணுவதற்கான ஏற்பாடுகளைச் செய்தல். 
 
 மாணவர்கள் ஒன்றுகூடுவதை; தடுப்பதற்காக வகுப்பு மட்டத்தில் பொருத்தமான நேரத்தில் இடைவேளை வழங்குதல். 
 
 வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவு, நீர் மற்றும் ஏனைய உபகரணங்களை பகிர்ந்து கொள்வதை தடுத்தல். 
 
 உணவுவேளையின்போது முகக்கவசத்தை கழற்றுவதால் மாணவர்கள் மத்தியில் இடைவெளியைப் பேணுதல். உணவு இடைவேளை நேரத்தைக் குறைத்தல். 
 
 ஒருவருக்கொருவர் ஸ்பரிசம் செய்யும்படியான விளையாட்டுக்களில் ஈடுபடுவதனை தவித்தல் மற்றும் உடற்பயிற்சி செயற்பாடுகளை சமூக இடைவெளி பேணி நடாத்துதல். 
 
 அவசர நிலைமையின் போது தொடர்பு கொள்வதற்கான தொலைபேசி இலக்கங்கள் மற்றும் தகவல்களை சேகரித்து அலுவலகத்தில் காட்சிப்படுத்தல் மற்றும் அது தொடர்பாக ஊழியர்களை தெறியப்படுத்தல். 
 
 கொவிட் 19 நோய்யறிகுறி காணப்படும் பிள்ளையொன்று இனங்காணப்படும் சந்தர்ப்பத்தில் அவரை நோயாளர் அறைக்கு அனுப்பி உடனடியாக பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியூடாக வலய மட்டத்தில் இணைக்கப்பட்டிருக்கும் பிள்ளை நோய்/ சரும நோய் தொடர்பான வைத்திய நிபுணரிடத்தில் காண்பித்தல் வேண்டும் பிள்ளைக்கு அவசர சிகிச்சை தேவை என உணரும் சந்தர்ப்பத்தில் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதுடன் பிரதேசத்தில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரிக்கு தெரியப்படுத்தல் வேண்டும். 
 
 சகல கல்வி வலயத்துக்கும் சிறுவர் நோய் விஷேட வைத்தியர் ஒருவரை நியமிப்பதற்கு சிறுவர்நோய் விஷேட வைத்தியர்களின் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளமையால், அவர்களைத் தொடர்புகொண்டு தேவையான தயவல்களைப் பெற்றுக்கொள்ளல் மற்றும் பிள்ளைகளை காண்பித்தல் வேண்டும். மேலும் குறித்த வைத்தியர்களின் தொலைபேசி இலக்கங்களை காட்சிப்படுத்தல் வேண்டும். 
 
 பாடசாலை அதிபரின் தலைமையில் பாடசாலையின் சுகாதார மேம்பாட்டுக் குழுவை செயற்பாட்டில் வைத்திருப்பதன் மூலம் கோவிட் 19 தொற்றுநோய் பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல் மற்றும் ஊழியர்களுக்கு பொறுப்புக்களை வழங்குதல். 
 
 பாடசாலைகளை சுகாதார பாதுகாப்பன இடமாக மாற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளல் மற்றும் பெற்றோர், பாடசாலை சமூகத்தின் மத்தியில் அதுதொடர்பான நம்பிக்கையை கட்டியெழுப்புதல். 
 
 பாடசாலைகளை நடாத்திச் செல்லும்போது சுகாதாரப் பாதுகாப்பினை உறுதி செய்யும் மதிப்பீட்டு ஆவணங்களை சரியாக பேணிவருதல்.  
 
 காய்ச்சல், மூச்சுக்கோளாறுகள் காணப்படும் பிள்ளைகள்/தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களின் பிள்ளைகள்/ கொவிட் நோய் பரிசோதனை செய்யப்பட்ட குடும்பங்களின் பிள்ளைகளை சுகாதார வழிகாட்டல்கள் கிடைக்கும்வரை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் என பெற்றோரை அறிவுறுத்தல். 
 
 மாணவர்களின் உள நலத்தை மேம்படுத்துவதற்கான செயற்பாடுகளை மேற்கொள்ளல். 
 
 கொவிட் 19 வைரஸ் தொடர்பான ஏதேனும் ஒரு நிலைமை காரணமாக வீட்டில் தங்கியிருக்கும் மாணவர்களின் அன்றாட கற்றல் நடவடிக்கைகளில் தடையின்றி ஈடுபடுவதற்கான ஏற்பாடுகளை செய்துகொடுத்தல். 
 
 மாணவர்களை உயிர் பாதுகாப்பு குமிழி முறைமைக்கு அமைய பாடசாலைக்கு அழைத்தல் வேண்டும். (ஒரே மாணவர் குழு ஒரே நாளில் சந்திக்குமாறு அழைத்தல்) 
 
 மாணவர்களை எப்போதும் பாராட்டுவதினூடாக அவர்களை உளரீதியாக வலுவூட்டுதல் 

 விசேட சந்தர்ப்பத்தில் 1390 க்கு அழைத்து தேவையான அறிவுரைகளைப் பெறுதல்.
 
Source: Ministry of Education.

 
இவை மாத்திரமன்றி இன்னும் பல விடயங்களும் விளக்கமாக தரப்பட்டுள்ளன. எனவே இந்த கையேட்டை முழுமையாக இங்கே பார்வையிடலாம். 

 
பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் தொடர்பான முழுமையான வழிகாட்டல் - 2021 பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் தொடர்பான முழுமையான வழிகாட்டல் - 2021 Reviewed by Irumbu Thirai News on November 05, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.