புலமைப்பரிசில் மற்றும் உயர்தர பரீட்சை பெறுபேறுகள் பற்றி பரீட்சைகள் ஆணையாளர்


நடைபெற்ற புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவது தொடர்பாக பரீட்சைகள் ஆணையாளர் L.M.D. தர்மசேன ஊடகங்களுக்கு தெரிவிக்கையில், 
 
புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவது தொடர்பான தயார்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவை தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. எனவே இன்னும் சில தினங்களில் பெறுபேறுகள் வெளியிடப்படும். 
 
அதேபோன்று உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் 03 மாதங்களுக்குள் வெளியிடுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
புலமைப்பரிசில் மற்றும் உயர்தர பரீட்சை பெறுபேறுகள் பற்றி பரீட்சைகள் ஆணையாளர் புலமைப்பரிசில் மற்றும் உயர்தர பரீட்சை பெறுபேறுகள் பற்றி பரீட்சைகள் ஆணையாளர் Reviewed by Irumbu Thirai News on March 06, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.