நாட்டை வந்தடைந்தார் கோத்தாபய!



முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச சற்று நேரத்திற்கு முன் நாட்டை வந்தடைந்தார். 

மக்களின் எதிர்ப்பை தொடர்ந்து கடந்த ஜூலை 13ஆம் திகதி நாட்டில் இருந்து வெளியேறி மாலைதீவுக்கு சென்ற கோத்தாபய அங்கிருந்து சிங்கப்பூர் சென்றார். 

சிங்கப்பூரிலிருந்து தனது பதவி விலகல் கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பி வைத்தார். 
அதன் பின்னர் தாய்லாந்து சென்ற அவர் தற்போது அங்கிருந்து நாடு திரும்பியுள்ளார். 

கோத்தாபயவுக்கு முன்னாள் ஜனாதிபதிக்குரிய சகல உரிமைகள் சலுகைகள் என்பன வழங்கப்படும் என அரசாங்கம் ஏற்கனவே அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டை வந்தடைந்தார் கோத்தாபய! நாட்டை வந்தடைந்தார் கோத்தாபய! Reviewed by Irumbu Thirai News on September 03, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.