கப்பம் கேட்கிறார்கள்! பரீட்சையின் பின் சேவையிலிருந்து விலகுவோம் - தனியார் பஸ் உரிமையாளர் சங்கம்

May 25, 2022


தற்போது நடைபெறும் சாதாரண தர பரீட்சையின் பின்னர் சேவையில் இருந்து விலகுவதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள்  சங்கம் அறிவித்துள்ளது. 

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கப்பம் கேட்கிறார்கள். பஸ் ஒன்றுக்கு 100 லிட்டர் டீசல் அடிப்பதற்காக ஆயிரம் ரூபாயை கப்பமாக கேட்கிறார்கள். 

எனவே முறையாக எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்ததும் சேவையிலிருந்து விலக சங்கம் தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கப்பம் கேட்கிறார்கள்! பரீட்சையின் பின் சேவையிலிருந்து விலகுவோம் - தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் கப்பம் கேட்கிறார்கள்! பரீட்சையின் பின் சேவையிலிருந்து விலகுவோம் - தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் Reviewed by Irumbu Thirai News on May 25, 2022 Rating: 5

கல்வித்துறையின் பிரச்சினைகளுக்கு டிசம்பர் மாதத்திற்குள் தீர்வு - கல்வி அமைச்சர்

May 25, 2022


கல்வித் துறையிலே காணப்படும் அவசியம் தீர்க்கப்படவேண்டிய பிரச்சினைகளுக்கு எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் தீர்வு வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சின் புதிய செயலாளராக M. நிஹால் ரணசிங்க தனது கடமைகளை பொறுப்பேற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், பாடநூல்களை விநியோகித்தல், பரீட்சைகளை நடாத்துதல், பெறுபேறுகளை வெளியிடல், பல்கலைக்கழக பிரவேசம் போன்ற கல்வித்துறையில் முக்கியமாக தீர்க்கப்படவேண்டிய பிரச்சினைகளுக்கு எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் தீர்வுகள் வழங்கப்படும். மேலும் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் மாணவர்களுக்கு மதிய போசன திட்டம் முன்னெடுக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.

அமைச்சரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைச்சின் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

கல்வித்துறையின் பிரச்சினைகளுக்கு டிசம்பர் மாதத்திற்குள் தீர்வு - கல்வி அமைச்சர் கல்வித்துறையின் பிரச்சினைகளுக்கு டிசம்பர் மாதத்திற்குள் தீர்வு - கல்வி அமைச்சர் Reviewed by Irumbu Thirai News on May 25, 2022 Rating: 5

அத்தியாவசிய ஊழியர்களை மாத்திரம் கடமைக்கு அழைத்தல்: சுற்றுநிருபம் இன்று வெளியாகாமைக்கான காரணம்!

May 24, 2022


அத்தியாவசிய ஊழியர்களை மாத்திரம் பணிக்கு அழைப்பதற்கான அதிகாரத்தை நிறுவனத் தலைவர்களுக்கு வழங்கும் வகையில் பொது நிர்வாக அமைச்சினால் இன்றைய தினம் சுற்றுநிறுபம் வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் இன்றைய தினம் சுற்றுநிறுபம் வெளியாகாமைக்கான காரணம் குறித்த அமைச்சுக்கு புதிய செயலாளர் ஒருவர் நியமிக்கப்பட்டமையே என தெரியவருகிறது. எவ்வாறாயினும் குறித்த சுற்றுநிறுபம் மிக விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அமைச்சரவை அமைச்சர்களுக்கான புதிய செயலாளர்கள் 23 பேர் இன்றைய தினம் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அத்தியாவசிய ஊழியர்களை மாத்திரம் கடமைக்கு அழைத்தல்: சுற்றுநிருபம் இன்று வெளியாகாமைக்கான காரணம்! அத்தியாவசிய ஊழியர்களை மாத்திரம் கடமைக்கு அழைத்தல்: சுற்றுநிருபம் இன்று வெளியாகாமைக்கான காரணம்! Reviewed by Irumbu Thirai News on May 24, 2022 Rating: 5

பல்கலைக்கழக மாணவர்கள் 35 பேர் கைது!

May 24, 2022


வயம்ப பல்கலைக்கழகத்தின் குளியாபிட்டிய வளாகத்தைச் சேர்ந்த மாணவர்கள் 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

பகிடிவதைக்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர் ஒருவரையும் அந்த மாணவர் தங்கியிருந்த விடுதியின் காவலாளி ஒருவரையும் தாக்கியமை தொடர்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாக்குதலுக்குள்ளான காவலாளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பல்கலைக்கழக மாணவர்கள் 35 பேர் கைது! பல்கலைக்கழக மாணவர்கள் 35 பேர் கைது! Reviewed by Irumbu Thirai News on May 24, 2022 Rating: 5

கொரிய மொழிப் பரீட்சை தொடர்பான அறிவித்தல்!

May 24, 2022


தென் கொரியாவில் வேலை வாய்ப்புக்காக இலங்கையர்களை தெரிவு செய்யும் பணி கொரிய மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படுகிறது. 

அந்த வகையில் இவ்வாறு கொரியாவுக்காக இளைஞர் யுவதிகளை வேலைவாய்ப்பின் பொருட்டு தெரிவு செய்வதற்காக கொரிய மொழி பரீட்சை நடத்தப்படுகிறது. அதில் இந்த வருடத்திற்கான பரீட்சை நேற்றைய தினம் ஆரம்பமானது. இது இலங்கையில் நடத்தப்படும் ஐந்தாவது கொரிய மொழி பரீட்சையாகும். 

இந்த பரீட்சைக்காக இம்முறை 31, 378 விண்ணப்பதாரிகள் தகுதி பெற்றுள்ளனர். அதில் தினமும் 4 குழுக்கள் கணினி அடிப்படையிலான பரீட்சைக்குத் தோற்றுகின்றனர்.

இந்தப் பரீட்சை தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் எவ்வித செல்வாக்கையம் செலுத்த முடியாது என பணியகத்தின் சர்வதேச விவகாரங்களுக்கான மேலதிக பொது முகாமையாளர் மங்கள ரந்தெனிய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொரிய மொழிப் பரீட்சை தொடர்பான அறிவித்தல்! கொரிய மொழிப் பரீட்சை தொடர்பான அறிவித்தல்! Reviewed by Irumbu Thirai News on May 24, 2022 Rating: 5

சா. தர பரீட்சை எழுதியவர் கைது!

May 24, 2022


தற்போது சாதாரண தரப் பரீட்சை நடைபெற்று வரும் நிலையில் கல்முனை பிரதேசத்தில் உள்ள பரீட்சை நிலையம் ஒன்றில் பரீட்சை எழுதிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனது மைத்துனருக்காக பரீட்சை எழுதிய நிலையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

பரீட்சை நிலைய மேற்பார்வையாளர் போலீசில் இவர் தொடர்பில் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

மேலும் குறித்த மைத்துனரும் கைது செய்யப்பட்டு தற்போது இருவருக்கும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சா. தர பரீட்சை எழுதியவர் கைது! சா. தர பரீட்சை எழுதியவர் கைது! Reviewed by Irumbu Thirai News on May 24, 2022 Rating: 5

புலமைப்பரிசில் பரீட்சை - 2021: பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியாகின!

May 24, 2022


2021 ம் வருடத்திற்குரிய தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியாகியுள்ளன. 

அந்த வகையில் தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கான வெட்டுப் புள்ளிகளைக் கீழே காணலாம்.




புலமைப்பரிசில் பரீட்சை - 2021: பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியாகின! புலமைப்பரிசில் பரீட்சை - 2021: பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியாகின! Reviewed by Irumbu Thirai News on May 24, 2022 Rating: 5

புதிய கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த் எடுத்த முக்கிய முடிவு!

May 20, 2022


கல்வி அமைச்சராக இன்றைய தினம் பதவியேற்ற சுசில் பிரேமஜயந்த தனது அமைச்சு அதிகாரிகளுடன் கலந்துரையாடும் போது முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.

அதாவது தேசிய பாடசாலைகளுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான கடிதங்கள் வழங்கும் நடவடிக்கையை இன்று(20) முதல் தற்காலிகமாக இடைநிறுத்த முடிவு செய்துள்ளார். 

மேலும் தற்போதைய பாடசாலை விடுமுறை முடிவதற்குள் இது தொடர்பான கொள்கை ரீதியான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு அது தொடர்பில் பொது மக்களுக்கும் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த் எடுத்த முக்கிய முடிவு! புதிய கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த் எடுத்த முக்கிய முடிவு! Reviewed by Irumbu Thirai News on May 20, 2022 Rating: 5

சா. தர பரீட்சை கடமைகளில் ஈடுபடுபவர்களும் உரிய அதிபர்களும் பாடசாலைக்குச் செல்ல வேண்டும்! கூட்டம் Online முறையில்

May 20, 2022

எரிபொருள் நெருக்கடி மற்றும் போக்குவரத்து பிரச்சனை என்பவற்றின் காரணமாக இன்று பாடசாலை நடைபெறாவிட்டாலும் சாதாரண தர பரீட்சை கடமைகளில் ஈடுபடும் மேற்பார்வையாளர்கள் குறித்த பாடசாலைகளுக்கு செல்ல வேண்டும் என பரீட்சைத் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை பரீட்சை நிலையங்களாக செயற்படும் பாடசாலைகளின் அதிபர்கள் இன்றைய தினம் பாடசாலைக்குச் சென்று அதுதடர்பான ஒழுங்குபடுத்தல் கருமங்களுக்கு உதவி புரிய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் பரீட்சை நோக்குனர்களாக கடமை புரிபவர்கள் குறித்த மேற்பார்வையாளர்கள் அழைக்கும் பட்சத்தில் குறித்த பாடசாலைகளுக்கு செல்ல வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது மாத்திரமன்றி பரீட்சை தொடர்பில்  மேற்பார்வையாளர்களுக்கு நடத்தப்படும் ஆலோசனை கூட்டங்கள் இம்முறை Online முறையில் நடத்தப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேறு ஏதாவது அறிவுறுத்தல்கள் இருப்பின் இருபத்தி மூன்றாம் திகதி திங்கட்கிழமை பரீட்சை ஆரம்பமாவதற்கு முன்னர் வழங்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சா. தர பரீட்சை கடமைகளில் ஈடுபடுபவர்களும் உரிய அதிபர்களும் பாடசாலைக்குச் செல்ல வேண்டும்! கூட்டம் Online முறையில் சா. தர பரீட்சை கடமைகளில் ஈடுபடுபவர்களும் உரிய அதிபர்களும் பாடசாலைக்குச் செல்ல வேண்டும்! கூட்டம் Online முறையில் Reviewed by Irumbu Thirai News on May 20, 2022 Rating: 5

பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கும் திகதியில் மாற்றம்!

May 19, 2022

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் என்பவற்றுக்கு விடுமுறை வழங்கும் திகதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 

அந்த வகையில் நாளையுடன் விடுமுறை வழங்கப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்தாலும் நாளைய தினம் பாடசாலை நடைபெறாது என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. 

எரிபொருள் நெருக்கடி மற்றும் போக்குவரத்து பிரச்சினைகள் என்பவற்றை கருத்திற் கொண்டு நாளைய தினம் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய அரச ஊழியர்கள் கடமைக்கு செல்ல வேண்டாம் என பிரதமர் அறிவித்திருக்கும் நிலையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் பாடசாலைகள் மீண்டும் ஜூன் 6ஆம் திகதி ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கும் திகதியில் மாற்றம்! பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கும் திகதியில் மாற்றம்! Reviewed by Irumbu Thirai News on May 19, 2022 Rating: 5

பாடசாலைகளுக்கு நாளை முதல் விடுமுறை

May 19, 2022


நாட்டில் உள்ள அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு நாளையுடன்(20) முதலாம் தவணை விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

நாளை விடுமுறை வழங்கப்பட்டு ஜூன் 6ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 23ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய அரச ஊழியர்கள் நாளைய தினம் கடமைக்கு சமூகமளிக்க வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் அறிவித்திருந்தார். எரிபொருள் நெருக்கடி மற்றும் போக்குவரத்து பிரச்சினை என்பவற்றைக் கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்திருந்தார்.

ஆனால் வட மாகாண பாடசாலைகள் அனைத்தும் நாளைய தினம் வெள்ளிக்கிழமை வழமைபோன்று நடைபெறும் என மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் குயின்றஸ் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலைகளுக்கு நாளை முதல் விடுமுறை பாடசாலைகளுக்கு நாளை முதல் விடுமுறை Reviewed by Irumbu Thirai News on May 19, 2022 Rating: 5

அரச ஊழியர்கள் நாளை கடமைக்கு சமூகமளிக்க வேண்டாம் - பிரதமர்

May 19, 2022

அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய அரச ஊழியர்கள் நாளை (20) கடமைக்கு சமூகமளிக்க வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார். 

தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி மற்றும் போக்குவரத்து பிரச்சினை என்பவற்றைக் கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அரச ஊழியர்கள் நாளை கடமைக்கு சமூகமளிக்க வேண்டாம் - பிரதமர்  அரச ஊழியர்கள் நாளை கடமைக்கு சமூகமளிக்க வேண்டாம் - பிரதமர் Reviewed by Irumbu Thirai News on May 19, 2022 Rating: 5

06-05-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 06-05-2022

May 16, 2022

06-05-2022 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 
 
தமிழில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
சிங்களத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
 
முன்னைய வர்த்தமானி அறிவித்தலுக்கு செல்ல...
 
06-05-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 06-05-2022 06-05-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 06-05-2022 Reviewed by Irumbu Thirai News on May 16, 2022 Rating: 5
Powered by Blogger.