கப்பம் கேட்கிறார்கள்! பரீட்சையின் பின் சேவையிலிருந்து விலகுவோம் - தனியார் பஸ் உரிமையாளர் சங்கம்


தற்போது நடைபெறும் சாதாரண தர பரீட்சையின் பின்னர் சேவையில் இருந்து விலகுவதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள்  சங்கம் அறிவித்துள்ளது. 

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கப்பம் கேட்கிறார்கள். பஸ் ஒன்றுக்கு 100 லிட்டர் டீசல் அடிப்பதற்காக ஆயிரம் ரூபாயை கப்பமாக கேட்கிறார்கள். 

எனவே முறையாக எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்ததும் சேவையிலிருந்து விலக சங்கம் தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கப்பம் கேட்கிறார்கள்! பரீட்சையின் பின் சேவையிலிருந்து விலகுவோம் - தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் கப்பம் கேட்கிறார்கள்! பரீட்சையின் பின் சேவையிலிருந்து விலகுவோம் - தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் Reviewed by Irumbu Thirai News on May 25, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.