அத்தியாவசிய ஊழியர்களை மாத்திரம் கடமைக்கு அழைத்தல்: சுற்றுநிருபம் இன்று வெளியாகாமைக்கான காரணம்!


அத்தியாவசிய ஊழியர்களை மாத்திரம் பணிக்கு அழைப்பதற்கான அதிகாரத்தை நிறுவனத் தலைவர்களுக்கு வழங்கும் வகையில் பொது நிர்வாக அமைச்சினால் இன்றைய தினம் சுற்றுநிறுபம் வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் இன்றைய தினம் சுற்றுநிறுபம் வெளியாகாமைக்கான காரணம் குறித்த அமைச்சுக்கு புதிய செயலாளர் ஒருவர் நியமிக்கப்பட்டமையே என தெரியவருகிறது. எவ்வாறாயினும் குறித்த சுற்றுநிறுபம் மிக விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அமைச்சரவை அமைச்சர்களுக்கான புதிய செயலாளர்கள் 23 பேர் இன்றைய தினம் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அத்தியாவசிய ஊழியர்களை மாத்திரம் கடமைக்கு அழைத்தல்: சுற்றுநிருபம் இன்று வெளியாகாமைக்கான காரணம்! அத்தியாவசிய ஊழியர்களை மாத்திரம் கடமைக்கு அழைத்தல்: சுற்றுநிருபம் இன்று வெளியாகாமைக்கான காரணம்! Reviewed by Irumbu Thirai News on May 24, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.