கொரிய மொழிப் பரீட்சை தொடர்பான அறிவித்தல்!


தென் கொரியாவில் வேலை வாய்ப்புக்காக இலங்கையர்களை தெரிவு செய்யும் பணி கொரிய மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படுகிறது. 

அந்த வகையில் இவ்வாறு கொரியாவுக்காக இளைஞர் யுவதிகளை வேலைவாய்ப்பின் பொருட்டு தெரிவு செய்வதற்காக கொரிய மொழி பரீட்சை நடத்தப்படுகிறது. அதில் இந்த வருடத்திற்கான பரீட்சை நேற்றைய தினம் ஆரம்பமானது. இது இலங்கையில் நடத்தப்படும் ஐந்தாவது கொரிய மொழி பரீட்சையாகும். 

இந்த பரீட்சைக்காக இம்முறை 31, 378 விண்ணப்பதாரிகள் தகுதி பெற்றுள்ளனர். அதில் தினமும் 4 குழுக்கள் கணினி அடிப்படையிலான பரீட்சைக்குத் தோற்றுகின்றனர்.

இந்தப் பரீட்சை தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் எவ்வித செல்வாக்கையம் செலுத்த முடியாது என பணியகத்தின் சர்வதேச விவகாரங்களுக்கான மேலதிக பொது முகாமையாளர் மங்கள ரந்தெனிய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொரிய மொழிப் பரீட்சை தொடர்பான அறிவித்தல்! கொரிய மொழிப் பரீட்சை தொடர்பான அறிவித்தல்! Reviewed by Irumbu Thirai News on May 24, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.